விளையாட்டு

BCCI-க்கு எரிச்சலை ஏற்படுத்திய பாகிஸ்தான் வாரியத்தில் செயல்.. நடவடிக்கை எடுக்கக்கோரி ICC-க்கு புகார் !

BCCI-க்கு எரிச்சலை ஏற்படுத்திய பாகிஸ்தான் வாரியத்தில் செயல்.. நடவடிக்கை எடுக்கக்கோரி ICC-க்கு புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

BCCI-க்கு எரிச்சலை ஏற்படுத்திய பாகிஸ்தான் வாரியத்தில் செயல்.. நடவடிக்கை எடுக்கக்கோரி ICC-க்கு புகார் !

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டது.

அதே நேரம் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்றும் கூறப்பட்டது. மேலும், பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த பாகிஸ்தான் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.ஆனால், சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என்பது உறுதியானது. இதனால் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தால் மட்டுமே அந்த அணி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும், இல்லாவிடில் உலகக்கோப்பையை புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

BCCI-க்கு எரிச்சலை ஏற்படுத்திய பாகிஸ்தான் வாரியத்தில் செயல்.. நடவடிக்கை எடுக்கக்கோரி ICC-க்கு புகார் !

இந்த நிலையில், இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையிலான உயர்மட்ட ஆலோசனைக் குழு இந்த விவகாரம் குறித்து பல்வேறு விவரங்களை கவனத்தில் கொண்டு ஆய்வு செய்து இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து அதனை பிரதமரிடம் தெரிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆலோசனைக் குழு எடுக்கும் முடிவின்படிதான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என வெளியாகியுள்ள அறிவிப்பு, ஐசிசி மற்றும் பிசிசிஐ அமைப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பாகிஸ்தானின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஐசிசி தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories