விளையாட்டு

ரஞ்சி, IPL, TNPL... தொடர்ந்து சிறப்பாக ஆடும் தமிழ்நாடு வீரருக்கு இந்திய அணியில் இடம்.. வெளியான அறிவிப்பு!

தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரஞ்சி, IPL, TNPL... தொடர்ந்து சிறப்பாக ஆடும் தமிழ்நாடு வீரருக்கு இந்திய அணியில் இடம்.. வெளியான அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது. இதனால் இந்த சீசனில் அவரை அந்த அணி நன்கு பயன்படுத்தும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதனைப் நன்கு பயன்படுத்திய சாய் சுதர்சன் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், சிறப்பாக ஆடியும் திடீரென சாய் சுதர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் தமிழக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை குஜராத் அணி தொடர்ந்து பயன்படுத்தாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பான ஆடிய அவர் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் அவர் களமிறங்கினார்.

ரஞ்சி, IPL, TNPL... தொடர்ந்து சிறப்பாக ஆடும் தமிழ்நாடு வீரருக்கு இந்திய அணியில் இடம்.. வெளியான அறிவிப்பு!

சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கில் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய சாய் சுதர்சன் முதலில் நிதானமாக ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 12 பந்துகளுக்கு 10 ரன்கள் என ஆரம்பத்தில் அவ்வளவு மெதுவாக தொடங்கியவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியைத் தொடங்கினார். அதிலும் தீக்க்ஷனா பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர் அடித்து அசத்தினார். தொடர்ந்து 33 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து சரவெடியாக வெடித்த அவர், 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், மைதானமே அவரின் இந்த ஆட்டத்தை எழுந்து நின்று பாராட்டியது. இந்த அபார ஆட்டத்தைத் தொடர்ந்து விரைவில் அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் பின்னர், ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்து வருகிறார். டி.என்.பி.எல் தொடரில் ஐபிஎல்-லை விட அதிக தொகை கொடுத்து சாய் சுதர்சனை கோவை கிங்ஸ் அணி எடுத்த நிலையில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சாய் சுதர்சன் இருந்து வருகிறார்.

ரஞ்சி, IPL, TNPL... தொடர்ந்து சிறப்பாக ஆடும் தமிழ்நாடு வீரருக்கு இந்திய அணியில் இடம்.. வெளியான அறிவிப்பு!

இந்த நிலையில், அவருக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 13-ம் தேதி முதல் இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஏ அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியிலும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஏ அணி விவரம் : யாஷ் துள் (கேப்டன்), சாய் சுதர்சன் அபிஷேக் ஷர்மா, நித்தின் ஜோஸ், பிரதோஷ் பால், ரியான் பராக், நிஷாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங், துருவ் ஜுரேல், மனவ் சுதர், யுவ்ராஜ்சிங் டோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதீஷ் குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

banner

Related Stories

Related Stories