விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரால் ஆசிய அணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்.. என்ன செய்யப்போகிறது BCCI ?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரால் ஆசிய அணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்.. என்ன செய்யப்போகிறது BCCI ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தற்போது இதில் ஒரு சிக்கலும் எழுந்துள்ளது.

ஏனெனில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணி கலந்துகொண்டால் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இந்திய அணிக்கு உள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரால் ஆசிய அணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்.. என்ன செய்யப்போகிறது BCCI ?

இதனால் இதில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் ,அந்த நாட்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இரண்டாம் தர கிரிக்கெட் அணியை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மகளிர் அணி கண்டிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் என்றும், ஆடவர் அணியை அனுப்புவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவரால் சொல்லப்பட்டுள்ளது. 2010, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்ற நிலையில், அதற்கு இந்திய கிரிக்கெட் அணி அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories