விளையாட்டு

இந்தியாவில் பாதுகாப்பு இருக்கிறதா ? -பாகிஸ்தான் வாரியத்தின் செயலால் எரிச்சலில் BCCI.. நடந்தது என்ன ?

தங்கள் நாட்டின் வீரர்களின் நிலை இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதை ஆராய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு இருக்கிறதா ? -பாகிஸ்தான் வாரியத்தின் செயலால் எரிச்சலில் BCCI.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டது.

இந்தியாவில் பாதுகாப்பு இருக்கிறதா ? -பாகிஸ்தான் வாரியத்தின் செயலால் எரிச்சலில் BCCI.. நடந்தது என்ன ?

அதே நேரம் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்றும் கூறப்பட்டது. மேலும், பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த பாகிஸ்தான் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.ஆனால், சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என்பது உறுதியானது. இதனால் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தால் மட்டுமே அந்த அணி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும், இல்லாவிடில் உலகக்கோப்பையை புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தங்கள் நாட்டின் வீரர்களின் நிலை இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதை ஆராய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்திகளில், இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்தும், அதனை தடுக்க வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், எந்த அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது, பாகிஸ்தான் வீரர்கள் குறித்து ரசிகர்களின் மனநிலை என்பதும் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் இந்த அறிக்கையை இந்த குழு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பும் எனவும், அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வரலாமா? வேண்டாமா ? என்பது குறித்து வாரியம் முடிவு எடுக்கும் என்றும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வேறு எந்த நாடும் இப்படி குழுவை அனுப்பாத நிலையில், பாகிஸ்தான் அனுப்பும் இந்த குழுவின் செயல் பிசிசிஐ-க்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories