விளையாட்டு

”ஒரு வேளை அந்த பந்து எனது பேடில் பட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும் ?” -பீதியான நினைவலையை பகிர்ந்த அஸ்வின்!

”ஒரு வேளை அந்த பந்து எனது பேடில் பட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும் ?” -பீதியான நினைவலையை பகிர்ந்த அஸ்வின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியைத் தழுவி வெளியேறியது.

ஆனால், இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆட்டத்தின் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 54 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தாக்குதல் ஆட்டத்துக்கு மாறிய இந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் விராட் கோலி ஜோடி, விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக ஆடியது. இறுதியில் 3 ஓவர்களில் 48 என்ற இலக்குக்கு அணியை கொண்டு வந்தது இந்த ஜோடி. ஷாஹீன் அப்ரிடி வீசிய அடுத்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவை.

”ஒரு வேளை அந்த பந்து எனது பேடில் பட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும் ?” -பீதியான நினைவலையை பகிர்ந்த அஸ்வின்!

அடுத்த ஓவரை பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமான ஹாரிஸ் ரவுப் வீசினார். அவரின் ஓவரில் முதல் 4 பந்துகளில் 3 ரன்களே எடுக்கப்பட்ட நிலையில், 8 பந்துகளில் 28 ரன்கள் இலக்காக இருந்தது. 5 பந்தை சிறப்பான லெந்தில் ஷாட்டாக வீசிய ஹாரிஸ் ரவுப் பந்தில் பேக் புட் வந்து பௌலரின் தலைக்கு மேல் நம்பமுடியாத ஒரு சிக்ஸரை அடித்தார் கோலி. பின்னர் இறுதி பந்தில் பிளிக் முறையில் ஒரு பெரிய சிக்ஸ் அடித்து ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார் கோலி.

இறுதி ஓவரை முஹம்மது நவாஸ் வீச முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார் பாண்டியா. 5 பந்துக்கு 16 ரன்கள் தேவை பட அடுத்து வந்த கார்த்திக் ஒரு ரன் எடுக்க அடுத்த பந்து 2 ரன்கள் ஓடி, தொடர்ந்த வந்த இறுதி ஓவரின் 4-வது சிக்ஸருக்கு விளாசி ஆட்டத்தை முழுக்க இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். இடுப்பு உயரத்துக்கு வந்த அந்த பந்தை நடுவர் நோ பால் என அறிவிக்க களத்தில் பரபரப்பு எகிறியது. அடுத்த பந்து வைட் ஆக, தொடர்ந்து வந்த ப்ரீ ஹிட் பந்து ஸ்டம்பை தாக்க அதன் மூலம் 3 ரன்கள் எடுத்தார் கோலி.

இரண்டு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட தேவையில்லாமல் ஸ்டம்பிங் ஆகி ஆட்டமிழந்தார் தினேஷ் கார்த்திக். இதனால் களத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்துவீசிய நவாஸ் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பந்தை போலவே லெக் ஸ்டெம்புக்கு வெளியே வீசினார். அதனை அத்தனை பரபரப்பான சூழ்நிலையில் கூட கல்லி கிரிக்கெட்டில் விளையாடுவதைபோல ஒதுங்கி வந்தார். பந்து வைட் ஆனது. இந்தியாவுக்கு ஒரு ரன் கிடைத்தது. அடுத்த பந்தை அஸ்வின் அழகாக மிட் ஆஃப் திசையில் தூக்கிவிட்டு, வெற்றிக்கு தேவையான அந்த ஒரு ரன்னை எடுக்க இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

”ஒரு வேளை அந்த பந்து எனது பேடில் பட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும் ?” -பீதியான நினைவலையை பகிர்ந்த அஸ்வின்!

இந்த போட்டியை வெல்ல முக்கிய காரணமாக விராட் கோலி திகழ்ந்தாலும் இக்கட்டான நேரத்தில் சமயோஜிதமாக யோசித்து அணியை வெல்ல வைத்த அஸ்வினை இணையவாசிகள் கொண்டாடினர். இந்த நிலையில் இந்த போட்டி குறித்து அஸ்வின் தற்போது பேசியுள்ளார். அதில், “மிகவும் கடினமான வேலையை நான் செய்ய வேண்டி இருந்த காரணத்தால் களத்துக்குள் செல்லும் போதே தினேஷ் கார்த்திக்கை சபித்தேன். அதுபோல ரசிகர்கள் அதிகம் நிரம்பி இருந்த மைதானத்தை நான் பார்த்தது இல்லை. அந்த ஒரு பந்தை நான் ஆட எனக்கு ஏழு ஆப்ஷன் கொடுத்தார் கோலி. அப்போது விராட் கோலியை பார்த்தபோது அவர் மிகவும் கூர்மையாக ஆட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தார். எனது பார்வையில் அவர் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தது போல இருந்தது.

நவாஸ், ஒய்ட் வீசியதும் ஆட்டம் எங்கள் பக்கம் என்பதை அறிந்தேன். அன்றைய தினம் அவர் அதிக ரன்னும் கொடுத்திருந்தார். இன்-ஃபீல்டை கிளியர் செய்தேன். அந்த வெற்றி தருணத்தை நான் சமூக வலைதளங்களில் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு எண்ணம் எழும். ஒருவேளை பந்து கிரிப் ஆகி, எனது பேடில் பட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும் என எண்ணுவேன். இறுதியில் அந்த ஆட்டம் என்னால் பினிஷ் செய்யப்பட்டது” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories