விளையாட்டு

சுழன்றடித்த மெஸ்ஸி அலை.. ரசிகர்களின் கரகோஷத்தால் அதிர்ந்த மைதானம்.. அர்ஜென்டினாவாக மாறிய சீனா !

சுழன்றடித்த மெஸ்ஸி அலை.. ரசிகர்களின் கரகோஷத்தால் அதிர்ந்த மைதானம்.. அர்ஜென்டினாவாக மாறிய சீனா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடையும் நிலையில், அடுத்ததாக அவர் தொடர்ந்து PSG அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. அதிலும் ரொனால்டோ ஆடும் சவுதி லீக்கின் அல் நாசர் அணியின் போட்டி கிளப்பான அல் ஹிலால் ரொனால்டோவை விட அதிக தொகைக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

சுழன்றடித்த மெஸ்ஸி அலை.. ரசிகர்களின் கரகோஷத்தால் அதிர்ந்த மைதானம்.. அர்ஜென்டினாவாக மாறிய சீனா !

மேலும், மெஸ்ஸி நீண்ட நாள் ஆடிய பார்சிலோனா கால்பந்து கிளப் மீண்டும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த அணியோடு மெஸ்ஸியின் மேலாளரும் தந்தையுமான ஜோர்ஜே பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகளை பார்சிலோனா கால்பந்து கிளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா மறுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி தற்போது ஆடிவரும் PSG கிளப்பில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ளார் என்றும், இதன் காரணமாக இந்த சீசன் முடிந்ததும் அவர் PSG கிளப்பில் இருந்து விலகுவார் என்றும் PSG அணியில் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் அறிவித்தார். இதன் காரணமாக மெஸ்ஸி அடுத்து எந்த கால்பந்து அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி மெஸ்ஸி அமெரிக்காவின் MLS தொடரில் பங்கேற்கும் இன்டர் மியாமி அணியில் இணையவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் கால்பந்தை பிரபலப்படுத்தும் விதமாக அங்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை வைத்து சர்வதேச போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சுழன்றடித்த மெஸ்ஸி அலை.. ரசிகர்களின் கரகோஷத்தால் அதிர்ந்த மைதானம்.. அர்ஜென்டினாவாக மாறிய சீனா !

அதன்படி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி ஆஸ்திரேலியா அணியை சந்தித்தது. இந்த போட்டிக்காக பல மடங்கு அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. எனினும் அந்த டிக்கெட்டுகளை வாங்கவும் பலமடங்கு போட்டி இருந்ததாக கூறப்பட்டது. இந்த போட்டிக்காக அர்ஜென்டினா வந்த மெஸ்ஸிக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அர்ஜென்டினா வீரர்கள் தங்கிய ஹோட்டல் வெளியிலும் ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த போட்டி நடைபெற்ற மைதானம் முழுக்க முழுக்க அர்ஜென்டினா ஜெர்சிகளால் நிறைந்திருந்தது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒன்றரை நிமிடத்திலேயே மெஸ்ஸி அபார கோல் அடித்து அசத்தினார். இறுதி கட்டத்தில் அர்ஜென்டினா அணி மேலும் ஒரு கோல் அடிக்க அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இந்தப்போட்டி முழுக்க ரசிகர்ளின் மெஸ்ஸி மெஸ்ஸி என்ற கோஷத்தால் அரங்கம் அதிர்ந்த நிலையில், அவர்களுக்கு தீனி போடும் விதமாக மெஸ்ஸி செயல்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

banner

Related Stories

Related Stories