விளையாட்டு

உலகக்கோப்பை அட்டவணை வெளியாகாததற்கு காரணம் மோடி மைதானமா ? -வெளியான தகவலால் அதிர்ச்சி !

பாகிஸ்தான் அஹமதாபாத் மோடி மைதானத்தில் விளையாட தொடர்ந்து மறுப்பதால்தான் ஐசிசி உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை அட்டவணை வெளியாகாததற்கு காரணம் மோடி மைதானமா ? -வெளியான தகவலால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

உலகக்கோப்பை அட்டவணை வெளியாகாததற்கு காரணம் மோடி மைதானமா ? -வெளியான தகவலால் அதிர்ச்சி !

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

அதே நேரம் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்றும் கூறப்பட்டது. அதே நேரம் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த பாகிஸ்தான் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என செய்திகள் வெளியாகின. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை அட்டவணை வெளியாகாததற்கு காரணம் மோடி மைதானமா ? -வெளியான தகவலால் அதிர்ச்சி !

இது தொடர்பாகப் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி "“இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் ஒரே நகரம் குஜராத்தின் அகமதாபாத்தான். அங்கு இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடத்தப்படவுள்ளதாக வந்த செய்தியை பார்த்ததும் இதற்கு மேல் இந்தியாவுக்கு வந்துவிடாதீர்கள் என்று மறைமுகமாக சொல்வதைப் போல தோன்றியது. இந்த போட்டியை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்திருந்தால் நியாயமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அஹமதாபாத்தில் விளையாட தொடர்ந்து மறுப்பதால்தான் ஐசிசி உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறை சார்பில் அஹமதாபாத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக விளையாடவேண்டாம் என பாகிஸ்தான் வாரியத்துக்கு அறிவுறுத்தியதாகவும், அதன் காரணமாக பாகிஸ்தான் வாரியம் இந்த முடிவை எடுத்ததாகவும் டெலிகிராப் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதேநேரம் ஐசிசி மற்றும், பிசிசிஐ சார்பில் தொடர்ந்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாவும், இந்த விவகாரத்தில் பிசிசிஐ தரப்பில் பாகிஸ்தான் வாரியத்துக்கு ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் ஐசிசி உலகக்கோப்பை அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories