விளையாட்டு

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி.. ரோகித்சர்மாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் !

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அடுத்த சாம்பியன்ஷிப்புக்காக போராட போகிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி.. ரோகித்சர்மாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.

கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவிக்க இந்திய அணியோ 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அப்போதே இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு 50% முடிவுக்கு வந்தது. அதே போல இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளர் செய்ய இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி.. ரோகித்சர்மாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் !

ஆனால், ஆரம்பத்தில் அபாரமாக தொடங்கிய இந்திய அணி பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு 10 ஆண்டுகளுக்கு கானல் நீராகவே நீடிக்கிறது.

இந்த நிலையில், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அடுத்த சாம்பியன்ஷிப்புக்காக போராட போகிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "கடந்த நான்காண்டுகளில் கடினமாக உழைத்து, போரடியததால்தான் தொடர்ந்து இருமுறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருக்கிறோம். அதில் தோற்றாலும் கடந்த இரண்டாண்டுகளில் நாங்கள் சாதித்தவற்றை அப்படியே மறந்துவிட முடியாது. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அடுத்த சாம்பியன்ஷிப்புக்காக போராட போகிறோம்" என்று கூறினார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி.. ரோகித்சர்மாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் !

மேலும், "டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும். இரண்டாண்டுகள் ஒரு அணி கொடுக்கும் உழைப்பிற்கு ஏற்ற சரியான மாடலாக அதுதான் இருக்கும். ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில்தான் இந்த இறுதிப்போட்டியை நடத்த வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை. உலகின் எந்த இடத்திலும் இந்தப் போட்டியை ஆட முடியும் " என்று கூறியுள்ளார்.

அதே நேரம் ரோஹித் சர்மாவின் கருத்துக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக மட்டுமல்ல, 16 போட்டிகள் கொண்ட தொடராக கூட நடத்தலாம். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரேயொரு ஆட்டத்தில் தான் சாம்பியனை தேர்வு செய்து பதக்கங்களை வழங்குவார்கள்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories