விளையாட்டு

குஜராத்துக்காக பாகிஸ்தான் வாரியத்தின் முன் பணிந்த BCCI.. சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ! பின்னணி என்ன ?

சமீபத்திய ஆண்டுகளில் முதல் முறையாக பிசிசிஐ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியதுக்கு பணிந்துள்ள அதிர்ச்சி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குஜராத்துக்காக பாகிஸ்தான் வாரியத்தின் முன் பணிந்த BCCI.. சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ! பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

குஜராத்துக்காக பாகிஸ்தான் வாரியத்தின் முன் பணிந்த BCCI.. சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ! பின்னணி என்ன ?

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

அதோடு அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால்,இந்தியாவில் நடைபெறூம் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

குஜராத்துக்காக பாகிஸ்தான் வாரியத்தின் முன் பணிந்த BCCI.. சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ! பின்னணி என்ன ?

ஆனால், பாகிஸ்தான் உலகக்கோப்பைக்கு வரவில்லை என்றால் அதன் நிதிஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதோடு அந்த நாட்டுக்கு ஐசிசி சார்பில் அளிக்கப்படும் உதவிகளும் நிறுத்தப்படும் என்பதால் பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் கலந்துகொள்ளும் என்றே கூறப்பட்டது. மேலும் இந்த தொடரில் பாகிஸ்தான் கலந்துகொள்ளும் பட்சத்தில் அந்த போட்டியை தனது சொந்த மாநில மைதானமான அஹமதாபாத்தில் நடத்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா முயன்ற நிலையில், அதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்தால் நிச்சயம் அஹமதாபாத்தில் விளையாடமாட்டோம் என அறிவித்தது. பாகிஸ்தான் அணியின் இந்த அறிவிப்பு காரணமாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், தற்போது அவர் இறங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்துக்காக பாகிஸ்தான் வாரியத்தின் முன் பணிந்த BCCI.. சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ! பின்னணி என்ன ?

ஏற்கனவே ஆசியகோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் இருந்து முழுவதுமாக இடமாற்றம் செய்யவேண்டும் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த கோரிக்கையில் இருந்தும் பிசிசிஐ பின்வாங்கியுள்ளது. மேலும், இந்தியா தவிரத்த ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடக்க பிசிசிஐ ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி அகமதாபாத்தில் நடக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஒப்புக்கொண்டதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories