விளையாட்டு

IPL அணியே போதும் -தேசிய அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து IPL அணியோடு ஒப்பந்தம் போட்ட இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் ஐபிஎல் அணியால் இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

IPL அணியே போதும் -தேசிய அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து IPL அணியோடு ஒப்பந்தம் போட்ட இங்கிலாந்து வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன. அதோடு தென்னாபிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும் தொடர்களிலும் ஐபிஎல் அணிகள் முதலீடு செய்து அணிகளை வாங்கியுள்ளனர்.

IPL அணியே போதும் -தேசிய அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து IPL அணியோடு ஒப்பந்தம் போட்ட இங்கிலாந்து வீரர்!

சமீபத்தில் ஐபிஎல் அணிகள் இங்கிலாந்து அணிக்காக ஆடும் 6 வீரர்களிடம் நாட்டுக்காக ஆடுவதை துறந்து முழுக்க முழுக்க லீக் தொடரில் ஆட ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது குறிப்பிட்ட இங்கிலாந்து வீரர்கள் இங்கிலாந்து வாரியம் மற்றும் கவுண்டி அணிகளோடு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு ஐபிஎல் அணிகளோடு ஒப்பந்தம் மேற்கொண்டால் ஆண்டுக்கு 50 கோடி தருவதாக பேரம் பேசியதாக இங்கிலாந்தின் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்படி ஐபிஎல் அணிகளோடு ஒப்பந்தம் மேற்கொள்ளும் வீரர்கள் ஆண்டு முழுவதும் நடக்கும் லீக் தொடர்களில் சம்மந்தப்பட்ட அணிகளுக்காக விளையாடுவார்கள் என்றும், அவர்கள் தேசிய அணிக்காக நடைபெறும் போட்டியில் ஆட செல்லமாட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

IPL அணியே போதும் -தேசிய அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து IPL அணியோடு ஒப்பந்தம் போட்ட இங்கிலாந்து வீரர்!

இந்த நிலையில், 3.68 கோடிக்கு இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் ஐபிஎல் அணியால் இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் தற்போது இங்கிலாந்து தேசிய அணி ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

கொல்கத்தா அணி அமெரிக்காவில் நடக்கும் லீக் தொடரில் லாஸ் ஏன்ஜெல்ஸ் அணியை வாங்கியுள்ளது. இந்த அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாடும் படியும். இதற்காக இங்கிலாந்து தேசிய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு லாஸ் ஏன்ஜெல்ஸ் கிநைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் மேற்கொள்ளும் படி அவரிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories