விளையாட்டு

பாஜக MP-க்கு எதிராக போராட்டம்.. IPL போட்டியை பார்க்க சென்ற மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி மறுப்பு!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை ஐபிஎல் போட்டிக்குள் அனுமதிக்காத டெல்லி காவல்துறையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக MP-க்கு எதிராக போராட்டம்.. IPL போட்டியை பார்க்க சென்ற மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி மறுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

பாஜக MP-க்கு எதிராக போராட்டம்.. IPL போட்டியை பார்க்க சென்ற மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி மறுப்பு!

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு அமைத்தும் 3 மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் போராட்டத்திற்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.இதனால் இவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக MP-க்கு எதிராக போராட்டம்.. IPL போட்டியை பார்க்க சென்ற மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி மறுப்பு!

இதனிடையே பிரிஜ் பிரிஜ் பூஷன் சிங் மீது புகார் கொடுத்த 7 வீராங்கனைகளிடம் போலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதில், ”2016, 2018ம் ஆண்டு போட்டிகளின் போது பிரிஜ் பூஷன் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்" என வீராங்கனைகள் கூறியுள்ளனர். ஆனால் பாஜக எம்.பியை பாதுகாக்க ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டம் குறித்து கவனம் ஈர்க்கும் விதமாக டெல்லியில் நேற்றுநடைபெற்ற சென்னை -டெல்லி இடையேயான போட்டியை நேரில் காண டிக்கெட் எடுத்து சென்றுள்ளனர். ஆனால், அவர்களை மைதானத்துக்குள் காவல்துறை அனுமதிக்கவில்லை என ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக MP-க்கு எதிராக போராட்டம்.. IPL போட்டியை பார்க்க சென்ற மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி மறுப்பு!

இது தொடர்பாக பேசிய அவர், "போலீசார் எங்களை போட்டியை பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தினர். அது ஏன் என்பதை அறிய விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை டெல்லி காவல்துறை மறுத்தாலும் மல்யுத்த வீரர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்படாமல் வெளியில் நின்று கொண்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories