விளையாட்டு

தோனியின் மிகப்பெரிய பலமே சேப்பாக்கம் ரசிகர்கள்தான்- தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கிரேம் ஸ்மித் கூறியது என்ன?

தோனி தென்னாப்பிரிக்க டி20 லீகில் ஆட வந்தால் அதைவிட பெரிய விஷயம் எதுவும் இருக்காது என தென்னாபிரிக்க முன்னாள் வீரர் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.

தோனியின் மிகப்பெரிய பலமே சேப்பாக்கம் ரசிகர்கள்தான்- தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கிரேம் ஸ்மித் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

தோனியின் மிகப்பெரிய பலமே சேப்பாக்கம் ரசிகர்கள்தான்- தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கிரேம் ஸ்மித் கூறியது என்ன?

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்படுவதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

தோனியின் மிகப்பெரிய பலமே சேப்பாக்கம் ரசிகர்கள்தான்- தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கிரேம் ஸ்மித் கூறியது என்ன?

இந்த நிலையில், தோனி தென்னாப்பிரிக்கவின் டி20 லீகில் ஆட வந்தால் அதைவிட பெரிய விஷயம் எதுவும் இருக்காது என தென்னாபிரிக்க முன்னாள் வீரர் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார். தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தோனிக்குக் கிடைக்கும் வரவேற்பு அசாத்தியமானதாக இருக்கிறது. அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அவர் இந்திய அணிக்காக அளப்பரிய சேவைகளைச் செய்திருக்கிறார்.ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடுவது தோனிக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.

அணியில் தொடர்ச்சியாக மாற்றங்களை நிகழ்த்துவது அவரது பாணியில்லை. அதனாலயே அணிக்குள் ஒரு பதற்றமில்லாத நிசப்தமான சூழல் நிலவும்.தென்னாப்பிரிக்காவிலும் தோனிக்குப் பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அவர் தென்னாப்பிரிக்கவின் டி20 லீகில் ஆட வந்தால் அதைவிட பெரிய விஷயம் எதுவும் இருக்காது. அவர் எதோ ஒரு அணியின் ஆலோசகராக வந்தால் கூட அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories