விளையாட்டு

“பதக்கம் வென்றால் மட்டும் மகள்களா? - எங்கள் குரலையும் கேளுங்கள்” : மோடிக்கு மல்யுத்த வீராங்கனை கோரிக்கை!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக் எங்கள் மனதில் குரலையும் கேளுங்கள் என மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

“பதக்கம் வென்றால் மட்டும் மகள்களா? - எங்கள் குரலையும் கேளுங்கள்” : மோடிக்கு மல்யுத்த வீராங்கனை கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார்.இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

“பதக்கம் வென்றால் மட்டும் மகள்களா? - எங்கள் குரலையும் கேளுங்கள்” : மோடிக்கு மல்யுத்த வீராங்கனை கோரிக்கை!

போராட்டம் தொடர்பாக பேசிய பஜ்ரங் புனியா " இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்" என்று அறிவித்தார். பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த போராட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மல்யுத்த வீராங்கனைகள் சம்மதம் தெரிவித்தனர்.

“பதக்கம் வென்றால் மட்டும் மகள்களா? - எங்கள் குரலையும் கேளுங்கள்” : மோடிக்கு மல்யுத்த வீராங்கனை கோரிக்கை!

மேலும், பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீதான புகார் குறித்து விசாரிக்க ஒன்றிய விளையாட்டு துறை சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் இந்த வன்கொடுமைக்கு காரணமாக இருந்த பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி தற்போது மீண்டும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும் FIR பதிவு செய்யப்படாத நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூறி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் அந்த மனுவை உச்சநீதிமன்றம் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“பதக்கம் வென்றால் மட்டும் மகள்களா? - எங்கள் குரலையும் கேளுங்கள்” : மோடிக்கு மல்யுத்த வீராங்கனை கோரிக்கை!

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக் "பிரதமர் மோடி அவர்களே பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்கிறீர்கள். நாங்கள் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று வந்தால் எங்களை உங்களின் வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்கிறீர்கள். எங்களை உங்களின் மகள்கள் என்று கூறுகிறீர்கள். தற்போது நாங்கள் எங்களின் மனதின் குரலை கேளுங்கள் என்று கோரி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த 4 நாட்களாக கொசுக்கடிக்கு மத்தியில் சாலையிலேயே உறங்கி போராடிக் கொண்டிருக்கும் எங்களை ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திக்காதது ஏன்?" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories