விளையாட்டு

“CSK-வுக்கு வந்ததும் ரஹானே சிறப்பாக ஆடக் காரணம் என்ன” ? -தோனியின் பதில் என்ன ?

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் ரஹானேவின் சிறப்பான ஆட்டத்திற்கான காரணம் குறித்து தோனி பேசியுள்ளார்.

 “CSK-வுக்கு வந்ததும் ரஹானே சிறப்பாக ஆடக் காரணம் என்ன” ? -தோனியின் பதில் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பின்னர் லக்னோ, மும்பை அணிகளை வீழ்த்தியது.

அதன்பின்னர் ராஜஸ்தான் அணியோடு அதிர்ச்சி தோல்வி அடைந்த சென்னை அணி அதன்பின்னர் பெங்களூரு, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது.

 “CSK-வுக்கு வந்ததும் ரஹானே சிறப்பாக ஆடக் காரணம் என்ன” ? -தோனியின் பதில் என்ன ?

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் கான்வே, ருத்துராஜ் வழக்கம்போல சிறப்பான தொடக்கம் அமைந்தனர். 35 ரன்கள் குவித்து ருத்துராஜ் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த ரஹானே அதிரடியாக வெடித்தார்.

இந்த தொடரில் தொடர்ச்சியாக நான்காவது அரைசதம் விளாசிய கான்வே 56 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்த ஷிவம் துபே ரஹானேவுடன் இணைந்து அணியின் ரன்வேகத்தை ஜெட் வேகத்துக்கு உயர்த்தினார். 20 பந்துகளில் அதிரடி அரைசதம் விளாசியா துபே 50 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் ஜடேஜா சிறுது அதிரடி காட்டி ஆட்டமிழந்தார். இறுதிவரை அதிரடி காட்டிய ரஹானே ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. இது இந்த தொடரில் குவிக்கப்பட்ட அதிக ரன்னாக பதிவானது.

 “CSK-வுக்கு வந்ததும் ரஹானே சிறப்பாக ஆடக் காரணம் என்ன” ? -தோனியின் பதில் என்ன ?

இமாலய இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்திலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நரைன் ரன் எடுக்காமலும் ஜெகதீசன் 1 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 20 ரன்னிலும், கேப்டன் ரானா 27 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும் ஜேசன் ராய் 26 பந்துகளில் 61, ரிங்கு சிங் 53 ரன்கள் குவிக்க கொல்கத்தா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே குவிக்கமுடிந்தது. இதனால் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ரஹானேக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

 “CSK-வுக்கு வந்ததும் ரஹானே சிறப்பாக ஆடக் காரணம் என்ன” ? -தோனியின் பதில் என்ன ?

இந்த தொடரில் ரஹானேவை வாங்க எந்த அணியும் முயற்சி செய்யாத நிலையில் சென்னை அணி 50 லட்சத்துக்கு அவரை வாங்கியது. இவர் காலம் முடிந்து விட்டது என்ற நினைத்த நேரத்தில் மும்பைக்கு எதிரான 27 பந்துகளில் 61 ரன்கள், ராஜஸ்தானுக்கு எதிராக 19 பந்துகளில் 31 ரன்கள், பெங்களூருவுக்கு 20 பந்துகளில் 37 ரன்கள் என அதிரடி காட்டியுள்ளார். அதோடு 5 போட்டிகளில் 209 ரன்களை குவித்துள்ள அவர் இதனை 199 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் ரஹானேவின் சிறப்பான ஆட்டத்திற்கான காரணம் குறித்து தோனி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்

ரஹானே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளோம். அதனால்தான், சிறப்பாக செயல்படுகிறார். மேலும், அவருக்கு ஒன்டவுன் இடத்தை கொடுப்பதற்காக சிலர் (மொயின், ராயுடு) தங்களது இடத்தை இழந்தார்கள். ஆனால் இந்த முடிவின் காரணமாகதான் தற்போது அணி பலமானதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories