விளையாட்டு

"ICC ஒருதலைபட்சமாக, ஒரு நாட்டு சார்பாக செயல்படக்கூடாது" -BCCI விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் கண்டனம் !

இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளின்போது பாகிஸ்தான் போட்டிகளை நடுநிலை மைதானங்களுக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"ICC ஒருதலைபட்சமாக, ஒரு நாட்டு சார்பாக செயல்படக்கூடாது" -BCCI விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

"ICC ஒருதலைபட்சமாக, ஒரு நாட்டு சார்பாக செயல்படக்கூடாது" -BCCI விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் கண்டனம் !

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

"ICC ஒருதலைபட்சமாக, ஒரு நாட்டு சார்பாக செயல்படக்கூடாது" -BCCI விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் கண்டனம் !

அதோடு அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால்,இந்தியாவில் நடைபெறூம் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டது.

"ICC ஒருதலைபட்சமாக, ஒரு நாட்டு சார்பாக செயல்படக்கூடாது" -BCCI விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் கண்டனம் !

இந்த நிலையில், இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளின்போது பாகிஸ்தான் போட்டிகளை நடுநிலை மைதானங்களுக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜீம் சேத்தி "2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும்போது இந்திய அணி இங்கு வந்து விளையாடும் என்று நம்புகிறோம்.

ஆசியக் கோப்பைக்கான இந்தியப் போட்டிகளை நாங்கள் நடுநிலை மைதானங்களில் நடத்த முடிவெடுப்பதுபோல் இந்தியாவும் உலகக் கோப்பை போட்டிகளின்போது பாகிஸ்தான் போட்டிகளை நடுநிலை மைதானங்களுக்கு மாற்ற வேண்டும். எங்கள் நிலைப்பாடு என்னவெனில், எல்லாம் ஒருதலைபட்சமாக ஒரு நாட்டு சார்பாக செல்லக் கூடாது என்பதே. கடந்த காலங்களில் இங்கு பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்தது, ஆம், அது உண்மையே. ஆனால் இப்போது இல்லை. இப்போது பாகிஸ்தானில் விளையாடாமல் இருப்பதற்கு இந்தியாவின் சாக்குப் போக்கு என்ன? " என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories