விளையாட்டு

"RCB அணிக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட தோனிதான் காரணம்" -CSK வீரர் குட்டி மலிங்கா புகழாரம் !

RCB அணிக்கு எதிராக நான் சிறப்பாக செய்யப்பட தோனிதான் காரணம் என CSK வீரர் பதிரனா கூறியுள்ளார்.

"RCB அணிக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட தோனிதான் காரணம்" -CSK வீரர் குட்டி மலிங்கா புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.

பின்னர் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியோடு அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணியை சந்தித்தது.

"RCB அணிக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட தோனிதான் காரணம்" -CSK வீரர் குட்டி மலிங்கா புகழாரம் !

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியில் ருத்துராஜ் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும் கான்வே மற்றும் ரஹானே அதிரடி ஆட்டம் ஆடினர்.ரஹானே 37 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே பெங்களூரூ பந்துவீச்சை விளாசி தள்ளி 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு புறம் சிறப்பாக ஆடிய கான்வே 45 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அதிரடி காட்ட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களுரு அணி அடுத்தடுத்து கோலி மற்றும் லோம்ரோர் விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டு பிளிஸிஸ் மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர்.

"RCB அணிக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட தோனிதான் காரணம்" -CSK வீரர் குட்டி மலிங்கா புகழாரம் !

தொடக்கத்திலேயே டு பிளிஸிஸ் லோம்ரோர் கொடுத்த கேட்ச்களை சென்னை அணி தவறவிட்ட நிலையில், டு பிளிஸிஸ் சென்னை பந்துவீச்சை விளாசி தள்ளினார். இதனால் ராக்கெட் வேகத்தில் ரன்கள் பெங்களூரு அணியை நோக்கி குவிந்தது. மற்றொரு பக்கம் மேக்ஸ்வெல்லும் ருத்ரதாண்டவம் ஆடினார்.

ஒருவழியாக தோனியின் அபார கேட்ச் காரணமாக டு பிளிஸிஸ், மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த நிலையில் சென்னை அணி தொடர்ந்து நம்பிக்கையோடு பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது. இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் பெங்களூரு அணியால் 10 ரன்கள் மட்டுமே குவிக்க முடித்ததால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இறுதிக்கட்டத்தில் அபாரமாக பந்துவீசிய சென்னை அணி வீரர் பதிரனாவை பல்வேறு தரப்பினர் அடுத்த மலிங்கா என பாராட்டி வருகின்றனர்.

"RCB அணிக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட தோனிதான் காரணம்" -CSK வீரர் குட்டி மலிங்கா புகழாரம் !
Deepak Malik

இந்த நிலையில், தனது செயல்பாடு குறித்து பதிரனா மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் , " நாங்கள் நல்ல ரன்களை குவித்தோம். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்தில் நாம் இதனை எளிதாக எடுத்துவிடக் கூடாது என்று தோனி எங்களிடம் கூறினார். நான் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் பதற்றமாக இருந்தேன். அப்போது கேப்டன் தோனி என்னிடம் நிதானமாக இருக்குமாறும் என் திறமையில் நம்பிக்கை வைத்து பந்து வீசுமாறும் பயப்பட வேண்டாம் என்றும் கூறினார். அதன் காரணமாக நான் சிறப்பாக பந்துவீசினேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories