விளையாட்டு

"தோனி தோனிதான்.. அவரைப்போல எதிர்காலத்தில் கூட யாரும் வரமுடியாது" -சுனில் கவாஸ்கர் புகழாரம் !

எதிர்காலத்தில் யாரும் தோனி போல் வரப்போவதும் கிடையாது என முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

"தோனி தோனிதான்.. அவரைப்போல எதிர்காலத்தில் கூட யாரும் வரமுடியாது" -சுனில் கவாஸ்கர் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

"தோனி தோனிதான்.. அவரைப்போல எதிர்காலத்தில் கூட யாரும் வரமுடியாது" -சுனில் கவாஸ்கர் புகழாரம் !

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். கடந்த 12-ம் தேதி சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணிக்கு கேப்டனாக 200-வது போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். துரதிஷ்டவசமாக அந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.

"தோனி தோனிதான்.. அவரைப்போல எதிர்காலத்தில் கூட யாரும் வரமுடியாது" -சுனில் கவாஸ்கர் புகழாரம் !

200 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ள தோனியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில், எதிர்காலத்தில் யாரும் தோனி போல் வரப்போவதும் கிடையாது என முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்று நன்றாகவே தெரியும். அதற்கு தோனியின் கேப்டன்ஷிப்தான் காரணம். வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியிருப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது.

"தோனி தோனிதான்.. அவரைப்போல எதிர்காலத்தில் கூட யாரும் வரமுடியாது" -சுனில் கவாஸ்கர் புகழாரம் !

இவ்வளவு போட்டிகளில் அணியை வழிநடத்தும் போது அது நிச்சயம் வீரர்களின் தனிப்பட்ட செயல்பாட்டை பாதிக்கும். ஆனால் தோனி இதிலிருந்து சற்று வித்தியாசமானவர். அவருடைய கேப்டன்ஷிப் செயல்பாடு மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஆனால் அது அவரின் பேட்டிங்கை பாதித்தது இல்லை.தோனி போல் இதுவரை எந்த கேப்டனும் இருந்ததில்லை. இனி எதிர்காலத்தில் யாரும் தோனி போல் வரப்போவதும் கிடையாது" என புகழாரம் சூட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories