விளையாட்டு

”நீங்கள் ஒரு சாம்பியன்.. கட்டாயம் இதிலிருந்து மீள்வீர்கள்” -கொல்கத்தா அணி ட்வீட்டால் நெகிழும் ரசிகர்கள் !

கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் யாஷ் தயாளுக்கு ஆதரவாக ஒரு பதிவினை பதிவு செய்துள்ளது.

”நீங்கள் ஒரு சாம்பியன்.. கட்டாயம் இதிலிருந்து மீள்வீர்கள்” -கொல்கத்தா அணி ட்வீட்டால் நெகிழும் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் குஜராத் அணியை ரஷித் கான் தலைமை தாங்கினார். இந்த போட்டியில் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ரிதிமன் சாஹா 17 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனும் கில்லும் ஜோடி சேர கில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அபினவ் மனோகர் சிறிய அதிரடி ஆட்டம் ஆடி 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

”நீங்கள் ஒரு சாம்பியன்.. கட்டாயம் இதிலிருந்து மீள்வீர்கள்” -கொல்கத்தா அணி ட்வீட்டால் நெகிழும் ரசிகர்கள் !

பின்னர் இரு தமிழக வீரர்களான சாய் சுதர்சனும் விஜய் சங்கரும் நிதானமாக அணியை கட்டமைத்தனர். இரண்டு இரண்டு ரன்களாக குவித்த இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இதில் சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அதன் பின்னர் இறுதிக்கட்டத்தில் விஜய் சங்கர் அதிரடியாக ஜொலித்தார். 24 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் விஜய் சங்கர் 63 ரன்கள் குவிக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.

பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் குர்பாஸ் 15 ரனகளிலும் , ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பினர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயரும் கேப்டன் நிதேஷ் ராணாவும் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஆனால் நிதேஷ் ராணா 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

”நீங்கள் ஒரு சாம்பியன்.. கட்டாயம் இதிலிருந்து மீள்வீர்கள்” -கொல்கத்தா அணி ட்வீட்டால் நெகிழும் ரசிகர்கள் !

எனினும் தொடர்ந்து அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 40 பந்தில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.அதோடு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

இந்த போட்டியில் அணியை வெற்றிபெற வைத்த ரிங்கு சிங்வை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வந்த நிலையில், இறுதிஓவரை வீசிய யாஷ் தயாளை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், போட்டியில் வென்ற கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் யாஷ் தயாளுக்கு ஆதரவாக ஒரு பதிவினை பதிவு செய்துள்ளது.

அதில், "இது ஒரு கடினமான நாள், அவ்வளவுதான். தலைசிறந்த வீரர்களுமே கூட இதேபோன்ற நாட்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு சாம்பியன். கட்டாயமாக இதிலிருந்து மீண்டு வருவீர்கள். தலை நிமிருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories