விளையாட்டு

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு எப்படி இருக்கிறது? -நெல்லையில் மனம் திறந்த லட்சுமிபதி பாலாஜி !

கிரிக்கெட் போட்டி தற்போது கிராமங்களில் அதிகமாக வளர்ந்துள்ளது என நெல்லையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி கூறியுள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு எப்படி இருக்கிறது? -நெல்லையில் மனம் திறந்த லட்சுமிபதி பாலாஜி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நெல்லையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அகாடமி துவக்க நிகழ்வு சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பாலாஜி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "தோனி கிராமத்தில் தான் வந்துள்ளார். இப்போது மிக சிறந்த விளையாட்டு வீரராக இருந்தவர் கடந்த காலங்களில் பாம்பே, பெங்களூர், சென்னை ஆகிய பகுதியில் இருந்துதான் கிரிக்கெட் வந்தார்கள்.

ஆனால் இன்று கிராமத்தில் இருந்து கிரிக்கெட்டுக்கு விளையாட வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வசதி தற்போது இருக்கிறது. நான் எப்போதும் அப்துல் கலாமை நினைக்கக் கூடியவன். அவர் கனவு காணுங்கள் அது கண்டிப்பாக நிறைவேறும் என தெரிவித்தார். அதன்படி மாணவர்கள் கனவு காண வேண்டும் கண்டிப்பாக அது நடக்கும்" என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு எப்படி இருக்கிறது? -நெல்லையில் மனம் திறந்த லட்சுமிபதி பாலாஜி !

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "கிராம பகுதிகளில் கிரிக்கெட் போட்டி மிக நன்றாக வளர்ந்து உள்ளது. கிராமப் பகுதி மாணவர்களுக்கு கிரிக்கெட் போட்டியில் ஆர்வமாக இருந்தால் அவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளும் மேற்கொள்ளப்படும். இன்றைய பொழுதில் கிரிக்கெட் நன்றாக வளர்ந்து உள்ளது. கிரிக்கெட்டை நன்றாக விளையாடினால் உங்களது வாழ்க்கையை நன்றாக நடத்த முடியும்.

தற்போது இந்திய டீம் நன்றாக உள்ளது. ஆல் ரவுண்டர்ஸ் தேவை பெரிய அளவில் இருக்கிறது. கிரிக்கெட் போட்டியில் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் வளரலாம். கிரிக்கெட் விளையாட்டு வீரர் நடராஜர் கடந்து வந்த பாதை அதுவே. அவருக்கு சில காயங்கள் ஏற்பட்டு சில தடுப்புகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி வர வேண்டும், நடராஜன் கண்டிப்பாக வருவார்.

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு எப்படி இருக்கிறது? -நெல்லையில் மனம் திறந்த லட்சுமிபதி பாலாஜி !

எனக்கு பிடிச்சது டெஸ்ட் கிரிக்கெட்தான். நீங்கள் நிறைய நாட்கள் விளையாடினால் உங்களது திறமையை வெளிப்படும். உலக கோப்பையை வெல்வது எளிது கிடையாது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று தான் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவார்கள். தற்போது இந்தியாவில் வீரர்கள் தேர்வு என்பது சரியாகத்தான் நடத்தப்படுகிறது" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories