விளையாட்டு

”ஜடேஜாவுக்கு பதில் அஸ்வினுக்குதான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்” -தினேஷ் கார்த்திக் கருத்து!

டெல்லி டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதில் அஸ்வினுக்குதான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்கவேண்டும் என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

”ஜடேஜாவுக்கு பதில் அஸ்வினுக்குதான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்” -தினேஷ் கார்த்திக் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

”ஜடேஜாவுக்கு பதில் அஸ்வினுக்குதான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்” -தினேஷ் கார்த்திக் கருத்து!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி ஒரு கட்டத்தில் 91-1 என்ற நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், ஒரே ஓவரில் இந்திய வீரர் அஸ்வின் உலகின் நம்பர் 1 வீரர் லபுசேனையும் உலகின் நம்பர் 2 வீரர் ஸ்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எனினும் ஆஸ்திரேலிய அணியில் கவாஜா மற்றும் ஹன்ட்ஸ்காப் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

”ஜடேஜாவுக்கு பதில் அஸ்வினுக்குதான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்” -தினேஷ் கார்த்திக் கருத்து!

பின்னர் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 137-7 என்ற பரிதாப நிலையில் இந்திய அணி இருந்தது. ஆனால், பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் -அஸ்வின் இணை 114 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. இறுதியில் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் குவித்து வலுவான நிலையில் தான் இருந்தது. ஆனால், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், அதிரடியாக ஆடிவந்த டிராவிஸ் ஹெட்டை முதல் ஒவரிலேயே அஸ்வின் காலி செய்தார்.

அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடி சவாலான ரன்னை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியின் வீரர்கள் அதிரடியாக ஆட போகிறேன் என ஸ்வீப் ஷாட்டாக ஆடி தங்கள் விக்கெட்டுகளை அஸ்வின், ஜடேஜாவிடம் இழந்தனர். அந்த அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வெறும் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதாவது ஆட்டம் தொடங்கி 1 மணி நேரத்தில் 9 விக்கெட்டுகளை அந்த அணி இழந்துள்ளது. ஜடேஜா 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.இந்த போட்டியில் ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

”ஜடேஜாவுக்கு பதில் அஸ்வினுக்குதான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்” -தினேஷ் கார்த்திக் கருத்து!

இந்த நிலையில், இந்த போட்டியில் ஜடேஜாவுக்கு பதில் அஸ்வினுக்குதான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்கவேண்டும் என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நான் ரவீந்திர ஜடேஜாவை எந்த குற்றமும் சொல்லவில்லை. அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஆட்ட நாயகனுக்கான என் வாக்கு நிச்சயம் அஸ்வினுக்குதான். அவர் முதல் நாளில் மூன்று பந்துகளில் லபுசேன் மற்றும் ஸ்மித் இருவரையும் வீழ்த்தி இந்திய அணிக்கு ஏற்படுத்தி தந்த திருப்புமுனை மிகவும் அற்புதமானது.

அதன்பின்னர் ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் இந்திய அணியை 139/6 என்று கட்டுப்படுத்தி வைத்திருந்த பொழுது, மிகவும் நெருக்கடியான நேரத்தில் அஸ்வின் மிகவும் சிறப்பான ரன் பங்களிப்பை தந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்பட வழி வகுத்தார். எனவே என்னைப் பொருத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின்தான் ஆட்ட நாயகன் விருதுக்கு இந்த போட்டிக்குச் சரியானவர்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories