விளையாட்டு

எங்களிடம் கேட்காமல் எப்படி அதை செய்யலாம்.. ஜடேஜாவுக்கு தண்டனை அளித்த போட்டி நடுவர்.. BCCI அதிருப்தி !

வலி நிவாரணி எடுத்துக்கொண்டதற்காக ஜடேஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போட்டி நடுவர் ஆண்டி பாய்கிராப்ட் அறிவித்துள்ளார்.

எங்களிடம் கேட்காமல் எப்படி அதை செய்யலாம்.. ஜடேஜாவுக்கு தண்டனை அளித்த போட்டி நடுவர்.. BCCI அதிருப்தி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

எங்களிடம் கேட்காமல் எப்படி அதை செய்யலாம்.. ஜடேஜாவுக்கு தண்டனை அளித்த போட்டி நடுவர்.. BCCI அதிருப்தி !

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

அதன்பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 120 ரன்கள், அக்சர் படேல் 84, ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அறிமுக பந்துவீச்சாளர் முர்பி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

எங்களிடம் கேட்காமல் எப்படி அதை செய்யலாம்.. ஜடேஜாவுக்கு தண்டனை அளித்த போட்டி நடுவர்.. BCCI அதிருப்தி !

பின்னர் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜடேஜா,அக்சர் படேல், சமி ஆகியோரும் விக்கெட் வேட்டையை நடத்த இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 91 ரன களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்து.

முன்னதாக இந்த போட்டியின் முதல்நாளில் போது, முகமது சிராஜ் கொண்டு வந்த ஏதோ ஒரு பொருளை தனது கையால் தொட்டு பந்து வீசும் விரல்களில் ரவீந்திர ஜடேஜா தடவிக் கொண்ட பின்னர் பந்துவீசினார். இதனைக் குறிப்பிட்ட சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் ஜடேஜா பந்தை சேதப்படுத்தும் விதமாக எதோ கையில் தடவிக்கொண்டார் என விமர்சித்து வந்தனர்.

ஆனால், ஜடேஜா கையில் தடவிக்கொண்டு பொருள் வலி நிவாரணி என்பதும், பந்தை மிகவும் இறுக்கமாக பிடித்து வீசியதால் கை விரல்களில் ஏற்பட்ட வலியை குறைப்பதற்காகவே வலி நிவாரணியை ரவீந்திர ஜடஜா கைகளில் தடவிக் கொண்டார் என்றும் போட்டி நடுவரிடம் இந்திய அணி விளக்கமளித்துள்ளது. இதனை போட்டி நடுவருக்கு ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது போட்டி நடுவர் ஆண்டி பாய்கிராப்ட் இந்த விவகாரத்தில் ஜடேஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, ஜடேஜா நடுவரின் அனுமதி இல்லாமல் மருந்து தடவியது குற்றம் என்றும், இதற்காக அவருக்கு ஒரு புள்ளிகள் குறைக்கப்பட்டு போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீரர்கள் காயமடையும்போது அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நடுவரிடம் இதுவரை கலந்துரையாடப்படாத நிலையில், இது குறித்து மேல்முறையீடு செய்த பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories