விளையாட்டு

ஆசிய அணிகளால் கைவிடப்படும் பாகிஸ்தான்.. இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் மீடியாக்கள் கதறல் !

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த கத்தார் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த தொடரை நடத்தவே பல்வேறு ஆசிய நாடுகள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய அணிகளால் கைவிடப்படும் பாகிஸ்தான்.. இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் மீடியாக்கள் கதறல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

ஆசிய அணிகளால் கைவிடப்படும் பாகிஸ்தான்.. இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் மீடியாக்கள் கதறல் !

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகங்களை பிளவுபடுத்தும். இதே நிலை தொடர்ந்தால் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

ஆசிய அணிகளால் கைவிடப்படும் பாகிஸ்தான்.. இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் மீடியாக்கள் கதறல் !

அதோடு அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால்,இந்தியாவில் நடைபெறூம் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து விவாதிக்க அவசர கூட்டம் ஒன்று பக்ரைனில் நாளை நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தானில் ஆசிய கோப்பையை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து கருத்து கேட்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஆசிய கவுன்சில் அணிகளை இந்தியாவுக்கு சார்பாக பேசவைக்க முயற்சி நடப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆசிய அணிகளால் கைவிடப்படும் பாகிஸ்தான்.. இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் மீடியாக்கள் கதறல் !

மேலும் பாகிஸ்தானில் இந்த தொடர் நடைபெறாவிட்டார் வேறு எங்கு இந்த தொடரை நடத்துவது என்பது குறித்தும் விவாதம் நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த கத்தார் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த தொடரை நடத்தவே பல்வேறு ஆசிய நாடுகள் விரும்புவதாக கூறப்படுகிறது. இது தவிர பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார குழப்பம் காரணமாக பாகிஸ்தானே இந்த தொடரை நடத்துவதில் இருந்து பின்வாங்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories