விளையாட்டு

"உலகக்கோப்பை வேண்டும் என்றால் IPL-ஐ இந்திய வீரர்கள் புறக்கணிக்கவேண்டும்" -கவுதம் கம்பீர் ஆலோசனை !

இந்திய வீரர்கள் நடக்கவிருக்கும் 2023 ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

"உலகக்கோப்பை வேண்டும் என்றால் IPL-ஐ இந்திய வீரர்கள் புறக்கணிக்கவேண்டும்" -கவுதம் கம்பீர் ஆலோசனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது.அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐபிஎல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"உலகக்கோப்பை வேண்டும் என்றால் IPL-ஐ இந்திய வீரர்கள் புறக்கணிக்கவேண்டும்" -கவுதம் கம்பீர் ஆலோசனை !

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

ஆனால் பிற நாடுகளில் நடக்கும் இதுபோன்ற லீக் தொடர்களால் ஐபிஎல் அளவு வெற்றியைப்பெற முடியவில்லை. மேலும் பிற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ள பிசிசிஐ அனுமதிக்காத நிலையில் இந்திய வீரர்கள் அதில் பங்கேற்பதில்லை. இதன் காரணமாக கிரிக்கெட் பிரபலமாக உள்ள இந்தியாவில் அந்த நாடுகளின் லீக் போட்டியில் பெரிய அளவு பிரபலமாகவில்லை.

"உலகக்கோப்பை வேண்டும் என்றால் IPL-ஐ இந்திய வீரர்கள் புறக்கணிக்கவேண்டும்" -கவுதம் கம்பீர் ஆலோசனை !

அதேநேரம் இந்தியாவில் தொடர்ந்து ஐபிஎல் ஆடும் வெளிநாட்டு வீரர்கள் இந்திய மைதானங்களில் தொடர்ந்து ஆடி இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறார்கள். ஆனால் வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆடாத காரணத்தால் அங்கு இந்திய வீரர்கள் சிரமத்தை சந்திக்கின்றார்கள்.

மேலும், இந்திய வீரர்கள் இந்திய அணிக்கு ஆடுவதை விட ஐபிஎல் தொடரில் ஆடுவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற விமர்சனமும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதை உண்மையாக்குவது போல இந்திய அணிக்கு ஆடும் போது அடிக்கடி ஓய்வெடுக்கும் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடும்போது ஓய்வெடுப்பதில்லை.

"உலகக்கோப்பை வேண்டும் என்றால் IPL-ஐ இந்திய வீரர்கள் புறக்கணிக்கவேண்டும்" -கவுதம் கம்பீர் ஆலோசனை !

இந்த நிலையில், இந்திய வீரர்கள் நடக்கவிருக்கும் 2023 ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "ஐபிஎல் அணி பாதிக்கப்படும் என்று நினைத்தால், இந்திய அணியும் பாதிக்கப்படும். ஐபிஎல் தொடரை விட இந்திய கிரிக்கெட் தான் முக்கியமானது. இந்தியா உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்று நினைத்தால், இந்தியாவில் நடக்கவிருக்கும் இந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தான் அதற்கு பெரிய சந்தர்ப்பம்.

அதனால் இந்தியாவின் முக்கிய வீரர்கள் ஐபிஎல்லை தவறவிட்டால் அது ஒன்றும் பெரிய தவறில்லை. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் நடக்கும். ஆனால் உலகக் கோப்பை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் நடக்கும்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories