விளையாட்டு

நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்தவா ? செய்தியாளர் கேள்விக்கு ஆக்ரோஷமான பாபர் அசாம் !

நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்த வேண்டுமா ? என செய்தியாளரை நோக்கி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆக்ரோஷமாக பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்தவா ? செய்தியாளர் கேள்விக்கு ஆக்ரோஷமான பாபர் அசாம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அந்த அணியில் வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினர்.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற டக்கட் மற்றும் கிராவ்லியும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இருவரும் இது டெஸ்ட் போட்டி என்பதையே மறந்து டி20 போட்டி போல பாகிஸ்தான் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே நாலாபுறமும் சிதறத்தனர். அதன்பின்னர் வந்த வீரர்களும் அதிரடியாக ரன் குவிக்க இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 657 ரன்கள் குவித்தது.

நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்தவா ? செய்தியாளர் கேள்விக்கு ஆக்ரோஷமான பாபர் அசாம் !

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அப்துல்லா, இமாம் உல் ஹாக், பாபர் அசாம் உள்ளிட்டோர் சதம் அடித்தனர். பின்னர் இரண்டாம் இன்னிங்க்ஸையும் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 35.5 ஓவர்களில் 267 ரன்கள் குவித்து அதிரடியாக டிக்ளர் செய்தது.

343 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்தவா ? செய்தியாளர் கேள்விக்கு ஆக்ரோஷமான பாபர் அசாம் !

அதன்பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த போட்டி முடிந்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் "பாபர் அசாம், ரிஸ்வான் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் கருதுகிறார்களே, அணியின் ஸ்கோர் உங்கள் இருவரையும் சார்ந்து இருப்பதுதானே அதற்கு காரணம்?" என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பாபர் அசாம் கோவமடைந்தார்.

கோவத்தோடு, "ஆக, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்த வேண்டுமா ? என பாபர் ஆக்ரோஷமாக பதிலளித்தார். இதனால் செய்தியாளர் சந்திப்பில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories