விளையாட்டு

இன்னும் ஒரு போட்டிதான்.. ஓய்வை அறிவித்த மெஸ்ஸி.. முடிவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவானின் சர்வதேச பயணம் !

உலகக்கோப்பை இறுதிப்போட்டியே சர்வதேச அளவில் தனது கடைசிபோட்டியாக இருக்கும் என அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

இன்னும் ஒரு போட்டிதான்.. ஓய்வை அறிவித்த மெஸ்ஸி.. முடிவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவானின் சர்வதேச பயணம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றுடன் 16 அணிகள் வெளியேறிய நிலையில், ‘ரவுண்டு ஆப் 16’ மற்றும் காலிறுதியுடன் பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து உள்பட பல முன்னணி அணிகள் வெளியேறிவிட்டன.

நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும், முதல் முறை சாம்பியன் கனவில் குரோஷியா, மொராக்கோ அணிகள் அரையிறுதியில் களம் இறங்கின. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா - குரோஷியா அணிகள் மோதின.

இன்னும் ஒரு போட்டிதான்.. ஓய்வை அறிவித்த மெஸ்ஸி.. முடிவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவானின் சர்வதேச பயணம் !

இந்த போட்டியில் முதலில் இருந்தே அர்ஜென்டினா அணிகள் கோல் அடிக்க தீவிரம் காட்டின. 34வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. மெஸ்சி தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்து கோலை அடித்து அசத்தினார். பின்னர் அடுத்த 4 நிமிடத்தில் அணியின் மற்றொரு வீரர் ஜூலியல் அல்வோரஸ் இரண்டாவது கோலை அடித்து அணிக்கு வலுசேர்த்தார். முடிவில் முதல் பாதியில் அர்ஜென்டினா 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் 2வது பாதியில் 69 நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரஸ் மீண்டும் ஒரு கோலை அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். இதனையடுத்து குரோஷியா அணியால் ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் தடுத்ததால், அர்ஜென்டினா 3 - 0 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்து வெற்றிப்பெற்றது. இதன்மூலம் 6வது முறையால் உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இன்னும் ஒரு போட்டிதான்.. ஓய்வை அறிவித்த மெஸ்ஸி.. முடிவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவானின் சர்வதேச பயணம் !

இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி நடக்கவிருக்கும் சூழலில், அந்த போட்டியே சர்வதேச அளவில் தனது இறுதிப்போட்டியாக இருக்கும் என அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பின்னர் பேசிய மெஸ்ஸி, "வரும் 18ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்

பல்வேறு சாதனைகள் படைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், உலககோப்பையை வெல்வதே எங்களுடைய முக்கிய குறிக்கோள். அதற்கு இன்னும் நாங்கள் ஒரு அடி அருகே தான் இருக்கிறோம். இறுதிப் போட்டியில் இன்னும் ஒரு முறை கடுமையாக போராடுவோம். எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொண்டு இம்முறை கனவை நினைவாக்க பாடுபடுவோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories