விளையாட்டு

"இதில் நம்மதான் கிங்,, அவங்க எல்லாம் இப்போ சரியில்லை" - வெளிநாட்டு பயணம் குறித்து சேவாக் கருத்து !

மேற்கத்திய நாடுகள் மிகவும் நல்ல விருந்தோம்பலை வழங்குகின்றன என்று நினைத்த நாட்கள் எல்லாம் போய்விட்டன என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

"இதில் நம்மதான் கிங்,, அவங்க எல்லாம் இப்போ சரியில்லை" - வெளிநாட்டு பயணம் குறித்து சேவாக் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தகுதி சுற்றில் இலங்கை,அயர்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்பே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி தகுதி சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறியது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 12 பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

"இதில் நம்மதான் கிங்,, அவங்க எல்லாம் இப்போ சரியில்லை" - வெளிநாட்டு பயணம் குறித்து சேவாக் கருத்து !

பின்னர் ஜோடி சேர்ந்த கோலி, பாண்டியா ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாகவும் இறுதியில் அஸ்வினின் சமயோஜித செயல் காரணமாகவும் இந்திய அணி பாகிஸ்தானை இறுதிப்பந்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

அதைத் தொடர்ந்து சிட்னியில் பயிற்சி செய்துவந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இந்திய அணி வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு சாண்ட்விச் மட்டுமே கொடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு அப்படி வழங்கப்பட்ட உணவு ஆறிபோனதாகவும், நல்ல உணவாக இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இந்திய அணி வீரர்கள் ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இதில் நம்மதான் கிங்,, அவங்க எல்லாம் இப்போ சரியில்லை" - வெளிநாட்டு பயணம் குறித்து சேவாக் கருத்து !

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மேற்கத்திய நாடுகள் மிகவும் நல்ல விருந்தோம்பலை வழங்குகின்றன என்று நினைத்த நாட்கள் எல்லாம் போய்விட்டன. மிக உயர்ந்த தரமான விருந்தோம்பலை வழங்குவதில் இந்தியா பெரும்பாலான மேற்கத்திய நாடுகளை விட முன்னணியில் உள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories