விளையாட்டு

"களத்தில் ரோஹித் சர்மா கூறியதை பின்பற்றியதால் வெற்றி கிடைத்தது" - விராட் கோலி ஓபன் டாக் !

நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் நீ தொடர்ந்து களத்தில் நில் என்று கூறினர், அதை பின்பற்றினேன் என விராட் கோலி கூறியுள்ளார்.

"களத்தில் ரோஹித் சர்மா கூறியதை பின்பற்றியதால் வெற்றி கிடைத்தது" - விராட் கோலி ஓபன் டாக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ரோஹித் ஷர்மாவின் அணி மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் இருந்தது. ஓப்பனர்கள் ஆரம்பத்திலேயே வெளியேறிவிட்ட நிலையில் ஒரு மிகச் சிறப்பான இன்னிங்ஸை விளையாடி 'சேஸிங் கிங்' என்ற தன்னுடைய பெயரை நிரூபித்தார் விரார் கோலி. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்கினார் விராட். அவர்கள் இருவருமே அரைசதம் கடந்து அசத்த, மூன்று போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச டி20 தொடரை 2-1 என வென்றது இந்தியா.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 187 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. அந்த கடினமான இலக்கை துறத்திய இந்திய அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. இந்திய அணியின் ஓப்பனர்கள் கேஎல் ராகுல், கேப்டன் ரோஹித் ஷர்மா இருவருமே நான்கு ஓவர்களுக்குள்ளாகவே வெளியேறினர்.

"களத்தில் ரோஹித் சர்மா கூறியதை பின்பற்றியதால் வெற்றி கிடைத்தது" - விராட் கோலி ஓபன் டாக் !

ஆனால் அதன் பிறகு கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தினார். இந்த பார்ட்னர்ஷிப் 62 பந்துகளில் 104 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று சிறப்பாக கம்பேக் கொடுத்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கு பின்பு அனுபவ வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் பேசிய விராட் கோலி, இந்தப் போட்டியின்போது அணியினரிடம் இருந்து பெற்ற முக்கியமான மெசேஜ் ஒன்றைப் பற்றிக் கூறினார். "சூர்யகுமார் யாதவ் அப்படி அடிக்கத் தொடங்கியதும் நான் டக் அவுட்டைப் பார்த்தேன். ரோஹித் ஷர்மா, ராகுல் டிராவிட் ஆகியோரையும் பார்த்தேன். 'நீ தொடர்ந்து களத்தில் நில்' என்று இருவரும் கூறினார்கள்.

"களத்தில் ரோஹித் சர்மா கூறியதை பின்பற்றியதால் வெற்றி கிடைத்தது" - விராட் கோலி ஓபன் டாக் !

ஏனெனில் சூர்யா மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் பார்ட்னர்ஷிப் அமைப்பது தான் முக்கியம். அதனால் நான் என் அனுபவத்தைப் பயன்படுத்தி களத்தில் அதிக நேரம் நிற்கும் வகையில் ஆடினேன். அவர் ஆட்டம் இழந்த உடனேயே முதல் சில பந்துகளை எதிர்கொண்டு நன்றாக அடிக்க முடிவு செய்தேன். கம்மின்ஸ் பந்துவீச்சில் அந்த சிக்ஸர் அடித்தது எனக்கு நம்பிக்கை கொடுத்தது" என்று பரிசளிப்பு விழாவின் போது கூறினார்.

சர்வதேச டி20 அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுள் கோலியும் ஒருவர். இந்தப் போட்டியில் 48 பந்துகள் சந்தித்த அவர் 63 ரன்கள் விளாசினார். அவரோடு சேர்ந்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்த சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். அதனால் கடைசி ஓவரில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

banner

Related Stories

Related Stories