விளையாட்டு

"சீனியர்களை விட இவர்தான் சிறப்பாக செயல்பட்டார்" - பாகிஸ்தான் போட்டி குறித்து கௌதம் கம்பீர் கருத்து !

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சீனியர் சுழற்பந்துவீச்சாளர் சஹாலை விட ரவி பிஷ்னாய் சிறப்பாக செயல்பட்டார் என முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

"சீனியர்களை விட இவர்தான் சிறப்பாக செயல்பட்டார்" -  பாகிஸ்தான் போட்டி குறித்து கௌதம் கம்பீர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் குரூப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரோகித் சர்மா நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது.

"சீனியர்களை விட இவர்தான் சிறப்பாக செயல்பட்டார்" -  பாகிஸ்தான் போட்டி குறித்து கௌதம் கம்பீர் கருத்து !

ஆனால் சிறிய தவறால் ரோகித், விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்னர் இறுதியில் ஜடேஜா,பாண்டியா அதிரடி ஆட்டம் காரணமாக 2 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.

பின்னர் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல்.ராகுல் டி20-யில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.அந்த போட்டியில் சூரியகுமார் யாதவின் ஆட்டத்தால் இந்திய அணி பெரிய இலக்கை எட்டி ஹாங்காங் அணியை வீழ்த்தியது.

அதைத் தொடர்ந்து சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை கடந்து திரில் வெற்றியை பெற்றது.

"சீனியர்களை விட இவர்தான் சிறப்பாக செயல்பட்டார்" -  பாகிஸ்தான் போட்டி குறித்து கௌதம் கம்பீர் கருத்து !

இந்த போட்டி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்த போட்டி குறித்து இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இளம்வீரர் ரவி பிஷ்னாயை அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மற்ற பந்துவீச்சாளர்களெல்லாம் தடுமாறிய நிலையில், பிஷ்னாயின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது. பவர் பிளேயில் வீசிய பிஷ்னாய் பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாமின் விக்கெட் வீழ்த்தியது உண்மையில் பிரமிக்க வைத்தது, அதேபோன்று 18 வது ஓவர் வீசியதும் சிறப்பாக இருந்தது, இந்தியாவின் சீனியர் சுழற் பந்துவீச்சாளர் சஹால் வீசிய ஓவர்களெல்லாம் ஈஸியான ஓவர்கள் என்று கூறலாம், ஆனால் ரவி பிஷ்னாய் சஹாலை விட கடினமான நேரத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்" என்று பாராட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories