மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் நடைபெற்ற முறைகேடு குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் தினத்தந்தி இதழில் வெளியாகியுள்ளது.
அதன் விவரம் :
மராட்டிய தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது. அதில் நடந்த மோசடியை மறைக்க எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மீறி, அது தேர்தல் கமிஷனத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில் இருந்தே அப்பட்டமாக தெரிகிறது. அதனை நான் உங்களுக்கு பட்டியலிட்டு சொல்கிறேன்.
முதலாவது, தேர்தல் கமிஷனரை நியமிக்கும் குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்தது. அதற்காக 2023-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, குழுவில் இருந்த தலைமை நீதிபதி நீக்கப்பட் டார். தற்போது அதில் பிரதமர், உள்துறை 3 மந்திரி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார்கள். அதில் பிரதமர், உள் துறை மந்திரி எடுக்கும் முடிவுக்கு, எதிர்க் கட்சிதலைவரால் என்ன செய்யமுடியும்?
இரண்டாவது, போலியான வாக்காளர்களை சேர்த்தது. கடந்த 2019-ம் ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலின் போது 8.98 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2024-ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தலின் போது இது 9.29 கோடியாக உயர்ந்தது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் மாத சட்டசபை தேர்தலில் இது 9.70 கோடியாக அதிகரித்துவிட்டது. அதாவது 2019 மற்றும் 2024-ம் ஆண்டு இடையே 5 ஆண்டுகளில் 31 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் 2024-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்துக்குள் 5 மாதத்தில் 41 லட்சம் பேர் சேர்ந்து இருக்கிறார்
போலி வாக்குகள்
மூன்றாவது, வாக்குச் சதவீதம் அதிகமானது. தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, மராட்டிய தேர்தலில் மாலை 5 மணி வரை 58.22 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஆனால் இறுதி வாக்கு சதவீதம் 66,05 சதவீதம் என்று உள்ளது. அதாவது 5 மணிக்கு மேல் அதிகம் பேர் வாக்களித்து இருக்கிறார்கள்: இதனால் 7.83 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது 76 லட்சம் வாக்காளர்களுக்கு சமம்.
நான்காவது போலி வாக்குகள். மராட்டி யத்தில் 1 லட்சத்துக்கு அதிகமான வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆனால் அதில் 85 தொகுதிகளில் உள்ள 12 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மட்டும் புதிய வாக்காளர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சாவடிக்கும் சராசரியாக 600 வாக்காளர்கள் மாலை 5 மணிக்குப் பிறகு வந்திருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு நிமிடம் என்ற அடிப்படை கணக்கிட்டால் வாக்களிப்பு இரவு 10 மணி வரை நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அப்படியானால் இந்த கூடுதல் வாக்குகள் எப்படி பதிவானது?. இந்த 85 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருக்கிறது.
தாமரை காந்தம்
உதாரணமாக காமதி சட்டசபை தொகுதியை எடுத்துக்கொள்ளலாம். கடந்த 2024- ம்ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் 1.36 லட்சம் வாக்குகள் வாங்கியது. பா.ஜனதா-1.19 லட்சம் வாக்குகள். அதே ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதே 1.36 லட்சம் வாக்குகளை பெற்றது. ஆனால் இப்போது பா.ஜனதா 1.75 லட்சம் வாக்குகளை பெற்று இருக்கிறது. அதாவது 56 ஆயிரம் வாக்குகள் அதிகரித்து இருக்கிறது. இது எப்படி முடிந்தது?. இந்த இரண்டு தேர்தல்களுக்கு இடையில், காம்தியில் 35 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காதவர்களும், இந்த 35 ஆயிரம் புதிய வாக்காளர்களும், ஏனோ துல்லியமாக பா.ஜனதா பக்கம் கவரப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த கவர்ச்சிக்கு ஈர்க்கப்பட்ட விதத்தைப் பார்த்தால், அதில் ஒரு "தாமரை" வடிவம் கொண்ட தொலைநிலை காந்தம் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஜனநாயகத்திற்கு விஷமாகும்
ஐந்தாவது ஆதாரங்களை அழிப்பது. 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்ட சபை தேர்தல்களுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை நாங்கள் கேட்டதற்கு, தேர்தல் கமிஷன் கொடுக்க மறுத்துவிட்டது. அதைவிட மோசமானது, சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஒரு மாதத்துக்குள், ஒரு வாக்குச்சாவடியில் நடந்த வாக்களிப்புக்கான சி.சி.டி.வி மற் றும் வீடியோ காட்சிகளை வெளியிட உத்தரவிட்ட ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிகளை திருத்தம் செய்தது.
தேர்தல் மோசடி என்பது சூதாட்ட விளையாட்டு போல, அதில் மோசடியான தரப்பே வெல்லலாம், ஆனால் அது மக்களின் நம்பிக்கையை அழித்து விடும். மோசடியால் நடைபெறும் தேர்தல்கள், எந்த ஜனநாயகத்துக்கும் ஒரு விஷமாகும்.