அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி : தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக துணை முதல்வர் ராஜினாமா ?

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியின் தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி : தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக துணை முதல்வர் ராஜினாமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.

இதனிடையே தற்போது நடைபெற்ற டாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மகாராஷ்டிராவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 தொகுதிகளிளும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி : தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக துணை முதல்வர் ராஜினாமா ?

அதே நேரம் பாஜக 9 தொகுதிகளிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்தமாக இந்தியா கூட்டணி 30 தொகுதியிலும், பாஜக கூட்டணி 17 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியின் தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். சிவசேனா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை உடைத்ததில் பெரும் பங்கு வகித்தவர்தேவேந்திர ஃபட்னாவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories