அரசியல்

பாஜகவை நம்பி சென்று ஏமாந்த ஏக்நாத் ஷின்டே - அஜித் பவார் : மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை !

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மகாராஷ்டிராவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பாஜகவை நம்பி சென்று ஏமாந்த ஏக்நாத் ஷின்டே - அஜித் பவார் : மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.

பாஜகவை நம்பி சென்று ஏமாந்த ஏக்நாத் ஷின்டே - அஜித் பவார் : மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை !

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மகாராஷ்டிராவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 10 தொகுதிகளிளும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

அதே நேரம் பாஜக 11 தொகுதிகளிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 6 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மொத்தமாக இந்தியா கூட்டணி 29 தொகுதியிலும், பாஜக கூட்டணி 18 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

banner

Related Stories

Related Stories