அரசியல்

"பிரதமர் பதவிக்கு தான் தகுதியற்றவர் என்பதை மோடி உணர்ந்துள்ளார்" - பிரியங்கா காந்தி விமர்சனம் !

பிரதமர் பதவிக்கு தான் தகுதியற்றவர் என்பதை மோடி உணர்ந்திருக்கலாம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

"பிரதமர் பதவிக்கு தான் தகுதியற்றவர் என்பதை மோடி உணர்ந்துள்ளார்" - பிரியங்கா காந்தி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சென்று இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் அவரின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் [பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் ரேபரேலி மக்களவை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, இந்து-முஸ்லிம் என பேசி அரசியல் செய்வதில் பிரதமர் மோடி முழுமையாக ஈடுபட்டு பின்னர் பின்வாங்குவதாக சாடினார். அவ்விவகாரத்தில் மோடி நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என பேசுகிறார் என்று விமர்சித்தார்.

"பிரதமர் பதவிக்கு தான் தகுதியற்றவர் என்பதை மோடி உணர்ந்துள்ளார்" - பிரியங்கா காந்தி விமர்சனம் !

தொடர்ந்து பேசிய அவர், தான் திறமையற்றவர் என்பதை பிரதமர் மோடி உணராமல் இருக்கலாம் அல்லது பிரதமர் பத- வியை வகிக்க தகுதி இல்லை என்பதை அவரே உணர்ந்திருக்கலாம் என கருத்து தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு சில கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே சேவை செய்ததாகவும் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை 4000 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மக்கள் பிரச்சினைகளை ராகுல் அறிந்து கொண்டார். அதனுடன் ஒப்பிடுகையில், பிரதமர் யாரையும் சந்திப்பதில்லை என குற்றம் சாட்டினார்.மேலும், மதத்தின் பெயரால் வாக்குகளைப் பெறாமல், மக்கள் பணிகளை வைத்து வாக்குகளை கேட்கும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories