அரசியல்

காவி நிறமாக மாறிய DD News லோகோ : தேர்தல் விதி மீறலை தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதித்தது ? -மம்தா கேள்வி !

தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதித்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.

காவி நிறமாக மாறிய  DD News லோகோ : தேர்தல் விதி மீறலை தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதித்தது ? -மம்தா கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் பழம்பெரும் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் எனப்படும் DD தற்போது பல்வேறு மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் பொதிகை என்ற பெயரில் தமிழில் சேவைகளை வழங்கி வந்த தூர்தர்ஷனின் பெயர் பாஜக ஆட்சிக்கு வந்ததும் DD தமிழ் என மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது தூர்தர்ஷன் நிறுவனத்தின் செய்தி தொலைக்காட்சியான DD News லோகோவின் நிறத்தை காவி நிறமாக மாற்றியுள்ளது. இதற்கு தற்போது நாடு முழுவதும் இருந்து வலுத்த கண்டனங்கள் குவிந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

காவி நிறமாக மாறிய  DD News லோகோ : தேர்தல் விதி மீறலை தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதித்தது ? -மம்தா கேள்வி !

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதித்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், "நாடு முழுவதும் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் தூர்தர்ஷன் லோகோ திடீரென காவி நிறத்துக்கு மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது சட்டவிரோதமானது.

இந்த நடவடிக்கை, தேசிய பொது ஒளிபரப்பாளரின் பாஜக சார்பு பற்றி உரக்கப் பேசுகிறது. தேர்தல் நேரத்தில் இத்தகைய காவி சார்பு தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது. தேர்தல் ஆணையம் இதை உடனடியாகத் தடுத்து, தூர்தர்ஷன் லோகோவை மீண்டும் நீல நிறத்துக்கு மாற்றியமைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்

banner

Related Stories

Related Stories