அரசியல்

"மீண்டும் மன்னிப்பு கேட்கிறோம்?" உச்சநீதிமன்றத்தில் கெஞ்சிய பாபா ராம்தேவ்- காட்டமாக விமர்சித்த நீதிபதிகள்

பாபா ராம்தேவ் நிறுவனத்தின் விதி மீறல் தொடர்பாக ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

"மீண்டும் மன்னிப்பு கேட்கிறோம்?" உச்சநீதிமன்றத்தில் கெஞ்சிய பாபா ராம்தேவ்- காட்டமாக விமர்சித்த நீதிபதிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆதரவாளரான யோகா சாமியார் ராம்தேவ், பதஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் அதிகளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக குறுகிய காலத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் பொருள்கள் பிரபலமடைந்தன. கொரோனா அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி CORONIL என்ற ஒரு மருந்தை அறிமுகம் செய்தார் ராம்தேவ். பின்னர் அவை கொரோனாவை எதிர்க்காது என மருத்துவ துறை அறிஞர்கள் அறிவித்தனர்.

அதோடு மட்டுமின்றி அலோபதி மருத்துவத்துக்கு எதிரான பல்வேறு பொய்யான விளம்பரங்களையும் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு பரப்பி வந்தது. அதில் பல தவறான கருத்துக்களும், அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களும் இருந்தது. இதனால் பொதுமக்களியே தவறான கருத்துகள் பரவியது. இதனைத் தொடர்ந்து அலோபதி மருத்துவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பக்கூடாது என பதாஞ்சலி நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் தொடர்ந்து அதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் இனி, இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பப்படாது அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் பதாஞ்சலி நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

"மீண்டும் மன்னிப்பு கேட்கிறோம்?" உச்சநீதிமன்றத்தில் கெஞ்சிய பாபா ராம்தேவ்- காட்டமாக விமர்சித்த நீதிபதிகள்

ஆனால், அதன்பின்னர் பதாஞ்சலி நிறுவனம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான கருத்துக்கள் பதாஞ்சலி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் ஆஜரான பாபா ராம்தேவ், நிறுவனத்தின் மீடியா பிரிவுதான் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளதாகவும். அதற்கு மன்னிப்பு கோரியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

ஆனால், இதனை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், " மீடியா பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா? எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? வழக்கு விசாரணையில் உள்ளபோது எவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த முடியும்?.நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு, தற்போது மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும்? ”என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

தொடர்ந்து மீண்டும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி இன்றே புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக ராம்தேவ் தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கில் ராம்தேவ் நிறுவனம் நடத்திய விதி மீறல் தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories