அரசியல்

சண்டிகர் மேயர் தேர்தலில் வென்ற INDIA கூட்டணி: அம்பலமான பாஜகவின் சதிச்செயல் - குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி வென்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சண்டிகர் மேயர் தேர்தலில் வென்ற INDIA கூட்டணி: அம்பலமான பாஜகவின் சதிச்செயல் - குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், யூனியன் பிரதேசமான சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன.

இந்த கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி சார்பில் குல்தீப் குமார் என்பவரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் என்பவரும் போட்டியிட்டனர். அப்போது நடைபெற்ற கருத்துக்கணிப்பில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என தெரியவந்தது. இதனால் தோல்வி பயத்தில் ஒன்றிய பாஜக அரசு மேயர் தேர்தலை 2 முறை ஒத்திவைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கடந்த ஜனவரி 30-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 36 உறுப்பினர்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த 8 வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அனில் மசி அறிவித்தார்.

சண்டிகர் மேயர் தேர்தலில் வென்ற INDIA கூட்டணி: அம்பலமான பாஜகவின் சதிச்செயல் - குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 16 வாக்குகளும், இந்தியா கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு 12 வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டதோடு, பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். சரியான காரணம் கூறாமல் தேர்தல் அதிகாரி இவ்வாறு அறிவித்தது கண்டனத்திற்குரியது என்று அனைவரும் கண்டனம் தெரிவித்து வந்த சமயத்தில், செல்லாதவை என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை தேர்தல் ஆணையர் திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் செல்லாது என அறிவிக்க முடியாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, குற்றம்சாட்டப்பட்ட தேர்தல் அதிகாரி அனில் மசிக்கு கண்டனம் தெரிவித்தது.

அதோடு சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும், ஜனநாயகப் படுகொலை என்றும் வாக்குச்சீட்டுகளில் திருத்தம் செய்த தேர்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதோடு, மறு உத்தரவு வரும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டத்தை நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார்
ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார்

தொடர்ந்து நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் அதிகாரி அனில் மசியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 8 வாக்குச்சீட்டுகளில் குறியீட்டை பதிவு செய்ததை அதிகாரியும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து தேர்தல் அதிகாரி இவ்வாறு செயல்படுவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்த நீதிபதி அமர்வு, இன்று (20.02.2024) வழக்கை ஒத்திவைத்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைகு வந்த நிலையில், தேர்தல் அதிகாரி திட்டமிட்டே ஒரு (பாஜக) வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று செயல்பட்டுள்ளார் என்று நீதிபதி அமர்வு தெரிவித்து கண்டித்துள்ளது. மேலும் ஆம் ஆத்மி கட்சியின் 8 வாக்கு சீட்டுகளை செல்லாது என்று அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும், தேர்தல் அதிகாரி சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராகி தவறான தகவலையும் அளித்துள்ளதாகவும், கிரிமினல் சட்ட பிரிவு 340-ன் படி உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜக வேட்பாளர் பாஜக வேட்பாளரின் வெற்றி ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியா கூட்டணி தரப்பு வேட்பாளர் குல்தீப் குமார் 20 வாக்குகளில் வெற்றி பெற்றதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories