அரசியல்

பீகார் : 3 ஆண்டுகளில் 3-வது முறை மாறிய கூட்டணி... முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார் !

பீகார் : 3 ஆண்டுகளில் 3-வது முறை மாறிய கூட்டணி... முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகாரில் 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு). இந்த தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை எழுந்தது. இருப்பினும் கூட்டணி உடையாமல் பா.ஜ.க தலைமை பார்த்துக் கொண்டது.

இந்த தேர்தலில் பா.ஜ.க, ஜே.டி.யு கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் நிதிஷ்குமாரால் 43 இடங்களை மட்டுமே பெற முடிந்த நிலையில் பா.ஜ.கவும் 74 இடங்களில் வெற்றி பெற்றது.எனினும் மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக்க பா.ஜ.க ஒத்துக் கொண்டது. மேலும் பா.ஜ.க துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது .இதில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 2022- ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நிதிஷ்குமார் அறிவித்து பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் நிதிஷ் குமார் லாலு பிரசாத் யாதவ்வின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். இந்த கூட்டணியின் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ்வும் பதவியேற்றனர்.

பீகார் : 3 ஆண்டுகளில் 3-வது முறை மாறிய கூட்டணி... முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார் !

இந்த நிலையில் மீண்டும் கூட்டணியை நிதிஷ் குமார் மாற்றியுள்ளார். சமீப காலமாக ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யு இடையே சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணியை மாற்றப்போவதாக தகவல்கள் வந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று காலை பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை மீண்டும் பா.ஜ.க ஆதரவோடு பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரம் பா.ஜ.க சார்பில் துணை முதல்வர் பதவி, அவர்கள் கேட்கும் இலாக்காக்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடம் ஆகியவற்றுக்கு நிதிஷ் குமார் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. நிதிஷ் குமார் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை கூட்டணியை மாற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories