அரசியல்

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் : முதலமைச்சர் ஜெகன் மோகனின் சகோதரிக்கு ஷர்மிளாவுக்கு புதிய பொறுப்பு !

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி YS ஷர்மிளா நியமிக்கப்பட்டார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் : முதலமைச்சர் ஜெகன் மோகனின் சகோதரிக்கு ஷர்மிளாவுக்கு புதிய பொறுப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது YS ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது சகோதரி தான் YS ஷர்மிளா. இவர்களது தந்தை YS ராஜசேகர ரெட்டி காங்கிரஸின் தீவிர ஆதரவாளராக இருந்தார். மேலும் 2004 - 2009 வரை முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டி, 2009-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆந்திர முதலமைச்சராக பதவி வகித்தார்.

ஆனால் அதே ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் YS ராஜசேகர ரெட்டி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இவரது குடும்பம் காங்கிரஸில் இருந்து விலகி, 2011-ல் YSR காங்கிரஸ் என்ற கட்சியை YS ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கினார். அப்போது இவரது சகோதரி YS ஷர்மிளா, இந்த கட்சியில் இணைந்து தீவிர பணியாற்றினார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் : முதலமைச்சர் ஜெகன் மோகனின் சகோதரிக்கு ஷர்மிளாவுக்கு புதிய பொறுப்பு !

அப்போது நடைபெற்ற 2019-ம் ஆண்டு அம்மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு YSR காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய நிலையில், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். YSR காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு இவரது உழைப்பும் முக்கிய பங்கு வாய்ந்தது என்று அம்மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இவருக்கும், இவரது சகோதரரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய YS ஷர்மிளா, புதிதாக YSR தெலங்கானா கட்சி என்ற ஒன்றை கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கினார். தற்போது வரை அக்கட்சியை நடத்தி வரும் இவர், அண்மையில் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் : முதலமைச்சர் ஜெகன் மோகனின் சகோதரிக்கு ஷர்மிளாவுக்கு புதிய பொறுப்பு !

YSR தெலங்கானா கட்சி, தெலங்கானா மாநில தேர்தலில் போட்டியிட்டால் வாக்கு பிரியும் என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அப்போதே இவர் காங்கிரஸில் இணைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த ஜனவரி 4-ம் தேதி காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் தன்னையும், தனது கட்சியையும் காங்கிரஸில் இணைத்துக்கொண்டார் YS ஷர்மிளா.

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலும் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் YS ஷர்மிளா இணைந்துள்ளது ஆந்திரா அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு, நேற்று ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories