அரசியல்

”அதிகார மமதையின் உச்சம்” : 92 MPக்கள் இடை நீக்கத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் இருந்து 92 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

”அதிகார மமதையின் உச்சம்” : 92 MPக்கள் இடை நீக்கத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு இந்த தாக்குதலுக்கு விளக்கம் கொடுக்காமல் கேள்வி கேட்கும் எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து வருகிறது.

கடந்த டிச.15ம் தேதிதான் கேள்வி எழுப்பிய கனிமொழி, ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கசேடன், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று மக்களவையில் 46 எதிர்க்கட்சி உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 46 எம்.பிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கூட்டத் தொடரில் மட்டும் இதுவரை 92 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மல்லிகார்ஜுன் கார்கே:

"எதிர்க்கட்சியினர் இல்லாத நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களையும் எந்தவித எதிர்ப்புமின்றி நிறைவேற்ற மோடி அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்தக் கேட்ட 47 மக்களவை உறுப்பினர்களை, மோடி அரசாங்கம் நீக்கியிருப்பது யதேச்சதிகாரம்."

அதிர் ரஞ்சன் சவுதுரி:

”பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் உள்துறை அமைச்சர் விளக்கம் தர வேண்டுமென கேட்டோம். 31 மக்களவை உறுப்பினர்களை நீக்கியிருக்கிறார்கள். இன்று அரசாங்கம் கொடுங்கோன்மையின் உச்சத்தை தொட்டிருக்கிறது.”

ஜெய்ராம் ரமேஷ்:

"டிசம்பர் 13ம் தேதி நேர்ந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென கேட்டதற்காக மாநிலங்களவையிலும் 45 INDIA கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்."

”அதிகார மமதையின் உச்சம்” : 92 MPக்கள் இடை நீக்கத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்!

சுப்ரியா சுலே :

"நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அரசாங்கத்தை கேள்வி கேட்பதற்கான உரிமை கொண்டவர்கள். அவர்களை சஸ்பெண்ட் செய்திருப்பது யதேச்சதிகாரமான செயல். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுக்கு பொறுப்பாக்கப்படுவோம் என்கிற பாஜகவின் அச்சத்தையே இச்செயல் காட்டுகிறது."

திருச்சி சிவா

"நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்தமாக எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளும்."

தொல். திருமாவளவன்

" நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்; உள்துறை அமைச்சர் அண்மையில் நடந்த பார்வையாளர்களின் அத்துமீறல் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்; அவர்களுக்கு அனுமதி பெற்றுத்தந்த பாஜக உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் "என்கிற கோரிக்கைகளை வலியுறுத்திய எதிர்க்கட்சிகளை முற்றாக முடக்கும் வகையில் இந்த அடாவடிப் போக்கில் ஆட்சியாளர்கள் இறங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாநிலங்களவையிலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இது அதிகார மமதையின் உச்சம்.

சு.வெங்கடேசன்:

"நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தியதற்காக இன்று மீண்டும் 33 எம்.பி.கள் இடைநீக்கம். மக்களவை வரலாற்றில் 46 எம். பி. களை இடைநீக்கம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது மோடி அரசு. நாளை இன்னொரு நான்கு எம்.பி. களை இடைநீக்கம் செய்து அரைசதத்தை எதிர்பார்க்கலாம்."

banner

Related Stories

Related Stories