அரசியல்

"பீகாரில் இடஒதுக்கீடு 50 %-ல் இருந்து 65 %-மாக ஆக உயர்த்தப்படும்" - முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு !

சாதி ரீதியிலான தரவுகளின் அடிப்படையில் பீகாரில் இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

"பீகாரில் இடஒதுக்கீடு 50 %-ல் இருந்து 65 %-மாக ஆக உயர்த்தப்படும்" - முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு நடத்தியது. அதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில், 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.0148 %) பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (EBC) சேர்ந்தவர்கள். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.1286 %) பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர்கள். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.6518 %) பேர் பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர்கள்

21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் (1.6824 %) பேர் பழங்குடியினத்தைச் (ST) சேர்ந்தவர்கள். 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.5224 %) பேர் பொது பிரிவினர். இந்துக்களின் மக்கள் தொகை 81.99 சதவீதமும், முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவீதம் என்பதும் தெரியவந்தது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"பீகாரில் இடஒதுக்கீடு 50 %-ல் இருந்து 65 %-மாக ஆக உயர்த்தப்படும்" - முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு !

இந்த நிலையில், சாதி ரீதியிலான தரவுகளின் அடிப்படையில் பீகாரில் இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இன்று பீகார் சட்டமன்றத்தில் சாதி ரீதியிலான தரவுகளை சமர்ப்பித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 13 சதவீதத்தில் இருந்து 20% ஆகவும், இரு பிரிவு ஓபிசி இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 43% ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும், பழங்குடியினர் இடஒதுக்கீடு 2% ஆக நீடிக்கும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்ககான 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு அளவு 75 சதவீதமாக உயரும். இதற்கான சட்ட மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலே கொண்டுவரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories