அரசியல்

அமித்ஷாவை சந்தித்த பின்னர் போராட்டத்தை வாபஸ் பெற்றாரா சாக்‌ஷி மாலிக் ? -அவரே கூறிய பதில் என்ன தெரியுமா ?

மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், அமித்ஷாவை சந்தித்த பின்னர் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக செய்தி வெளியான நிலையில், அதனை சாக்‌ஷி மாலிக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அமித்ஷாவை சந்தித்த பின்னர் போராட்டத்தை வாபஸ் பெற்றாரா சாக்‌ஷி மாலிக் ? -அவரே கூறிய பதில் என்ன தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமித்ஷாவை சந்தித்த பின்னர் போராட்டத்தை வாபஸ் பெற்றாரா சாக்‌ஷி மாலிக் ? -அவரே கூறிய பதில் என்ன தெரியுமா ?

இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.

அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமித்ஷாவை சந்தித்த பின்னர் போராட்டத்தை வாபஸ் பெற்றாரா சாக்‌ஷி மாலிக் ? -அவரே கூறிய பதில் என்ன தெரியுமா ?

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். அதன்படி தங்கள் வென்ற பதக்கங்களுடன் கங்கை நதியில் வீசக்கொண்டு சென்றபோது அங்கு இருந்த போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் மல்யுத்த வீரர்களுடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர்களும் அவர்களின் இந்த முடிவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பின்னர் பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் கைவிட்டு பிரிஜ்பூஷனை 5 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என மல்லியுத்த வீராங்கனைகள் கெடு விதித்தனர். இதனிடையே மல்யுத்த வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மல்யுத்த வீரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களான சாக்‌ஷி மாலிக், வினேஷ் பொகாட், பஜ்ரங் புனியா ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு ரயில்வே வேலைக்குத் திரும்புவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த தகவலை சாக்‌ஷி மாலிக் முழுமையாக மறுத்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கப் போவதில்லை எனவும், சத்யாகிரக போராட்டத்துடன் ரயில்வே பணியை தொடர்வதாகவும் சாக்‌ஷி மாலிக் ட்வீட் செய்துள்ளார். மேலும், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories