அரசியல்

"சட்டத்தை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” -நிர்மலா சீதாராமனுக்கு திமுக MP கடிதம் !

3 லட்சம் மதிப்புடைய ரஃபேல் வாட்ச்சை ரொக்க பணம் கொடுத்து வாங்கிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

"சட்டத்தை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” -நிர்மலா சீதாராமனுக்கு திமுக MP கடிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் குறித்து இணையத்தில் சர்ச்சைக்குரிய வகையில் செய்திகள் பரவியது. எனவே இதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்து பேட்டி அளித்திருந்தார். அப்போது அந்த வாட்ச் ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டவை என்றும், தான் ஒரு தேசியவாதி என்பதால் அந்த வாட்ச்சை வாங்கியதாகவும் கூறினார்.

மேலும் இந்தியா ரபேல் விமானங்களை ஆர்டர் செய்துபோது அந்த ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்ச்சுகள் தயாரிக்கப்பட்டது என்றும், இது சிறப்புப் பதிப்பு என்பதால் ரபேல் விமானத்தில் உள்ள சில பாகங்கள் இந்த வாட்ச்சில் உள்ளது என்றும் கூறினார். அதோடு அந்த 500 வாட்சுகளில் தான் வைத்திருப்பது 149-ஆவது பதிப்பு என்றும் கூறினார்.

"சட்டத்தை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” -நிர்மலா சீதாராமனுக்கு திமுக MP கடிதம் !

இவரது இந்த விளக்கத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தன்னிடம் இருக்கும் சொத்து என்று கூறும் அண்ணாமலைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்ச் வாங்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? என்று கேள்வியெழுப்பினார். அதோடு ரபேல் வாட்சுக்கான பில் கேட்டு இணையத்தில் அண்ணாமலைக்கு எதிராக ட்ரெண்ட் ஆனது.

அமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்" என்று குறிப்பிட்டார்.

"சட்டத்தை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” -நிர்மலா சீதாராமனுக்கு திமுக MP கடிதம் !

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏப்ரல் 1-ம் தேதி இதனை வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தார். இதனால் மார்ச் 31-ம் தேதியே "நாளை ஏப்ரல் 1.. பில் எங்கே அண்ணாமலை.." என்று இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இதனால் தான் ஏப்ரல் 14-ம் தேதி ரபேல் வாட்சுக்கான பில்லை வெளியிடுவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த சூழலில் கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ரபேல் வாட்சுக்கான பில் என்று சொல்லி சீட்டை காண்பித்து அதற்கான விளக்கத்தையும் அண்ணாமலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "ரபேல் வாட்ச் உலகத்திலேயே மொத்தமாக 500தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் என்னிடம் இருக்கும் வாட்ச் 147-வது ஆகும். இந்த வாட்ச் இந்தியாவில் 2 பேர் தான் வாங்கியுள்ளார்கள். அதில் ஒருவர் மும்பையில் இருக்கிறார். இதன் 2-வது வாட்ச் கோயம்பத்தூரில் உள்ள Zimson Time Private Limited-ல் விற்கப்பட்டுள்ளது. இந்த வாட்சை மார்ச் மாதம் 2021-ல் கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் வாங்கினார். எனக்கு இதுபோல் வாட்ச் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. எனவே உடனே சேரலாதன் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு அவரிடம் இருந்து நான் 3 லட்சம் பணமாக கொடுத்து மே 27, 2021-ம் ஆண்டு பெற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.

"சட்டத்தை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” -நிர்மலா சீதாராமனுக்கு திமுக MP கடிதம் !

இந்த நிலையில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் "தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் நண்பர்களிடமிருந்து மாதத்திற்கு ரூபாய் 7 லட்சம் முதல் 8 லட்சம் வரை அவரது குடும்ப செலவுகள், வீட்டு வாடகை மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு சம்பளம் தருவதற்காக பெற்றுக் கொள்வதாக 14.04.2023 அன்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து இவ்வாறு பணம் பெற்று வருவதாக கூறியுள்ளார். ஏறத்தாழ ரூபாய் 1.76 கோடி இவ்வாறு வாங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் தன் கையில் அணிந்திருக்கும் ரபேல் கடிகாரத்தை ரூபாய் 3 லட்சம் பணமாக கொடுத்து சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார்.1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால்,அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories