அரசியல்

ராகுலோடு கைகோர்த்த RJD, JDU.. பீகாரில் அசுரபலம் பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. கைவிடப்பட்ட பாஜக!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திப்போம் என ஜே.டி.யூ -ஆர்.ஜே.டி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

ராகுலோடு கைகோர்த்த RJD, JDU.. பீகாரில் அசுரபலம் பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. கைவிடப்பட்ட பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகாரில் 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு). இந்த தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை எழுந்தது. இருப்பினும் கூட்டணி உடையாமல் பா.ஜ.க தலைமை பார்த்துக் கொண்டது.

இந்த தேர்தலில் பா.ஜ.க, ஜே.டி.யு கூட்டணி எளிதில் வெற்றி பெற்றது. ஆனால் நிதிஷ்குமாரால் 43 இடங்களை மட்டுமே பெற முடிந்த நிலையில் பா.ஜ.கவும் 74 இடங்களில் வெற்றி பெற்றது.அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், பா.ஜ.கவில் இருந்துதான் முதல்வராக ஒருவரை நியமிக்க வேண்டும் என அதன் கட்சி தலைவர்கள் நிதிஷ்குமாருக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக்க பா.ஜ.க ஒத்துக் கொண்டது. மேலும் பா.ஜ.க துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது.இதில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

ராகுலோடு கைகோர்த்த RJD, JDU.. பீகாரில் அசுரபலம் பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. கைவிடப்பட்ட பாஜக!

அதன்பின்னர் நிதிஷ்குமார் அரசு மீது பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்க ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதற்கு ஜே.டி.யு தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து பா.ஜ.க நிகழ்வுகளை நிதிஷ்குமார் புறக்கணித்து வந்தார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற பாட்னாவில் ஜே.டி.யூ எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நிதிஷ்குமார் அறிவித்தார். அதன் பின்னர் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு பா.ஜ.க - ஜே.டி.யூ கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

ராகுலோடு கைகோர்த்த RJD, JDU.. பீகாரில் அசுரபலம் பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. கைவிடப்பட்ட பாஜக!

அதன்பின்னர் நிதிஷ் குமார் லாலு பிரசாத் யாதவ்வின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். இந்த கூட்டணியின் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ்வும் பதவியேற்றனர்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திப்போம் என ஜே.டி.யூ -ஆர்.ஜே.டி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

ராகுலோடு கைகோர்த்த RJD, JDU.. பீகாரில் அசுரபலம் பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. கைவிடப்பட்ட பாஜக!

கடந்த காலங்களில் பாஜக வடமாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதாலே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடிந்தது. ஆனால் தற்போது வடமாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு குறைந்து வந்த நிலையில், தற்போது இந்த அரசியல் மாற்றம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் மட்டும் மொத்தம் 40 தொகுதியில் உள்ள பாஜக கூட்டணிக்கு 39 எம்.பிக்கள் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories