அரசியல்

"பட்ஜெட்டில் இதுக்கு முன்னர் சொன்னதையே செய்யவில்லை, இப்போது மட்டும் ?" - டி.கே எஸ்.இளங்கோவன் விமர்சனம் !

பாஜக ஆட்சியில் உலக பணக்காரர்களில் 691வது இடத்திலிருந்த அதானியை 2-ம் இடத்திற்கு கொண்டு வந்ததை தவிர எதுவுமே செய்யவில்லை என திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

"பட்ஜெட்டில் இதுக்கு முன்னர் சொன்னதையே செய்யவில்லை, இப்போது மட்டும் ?" - டி.கே எஸ்.இளங்கோவன் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த தேர்தல் அறிக்கை அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்டதாகவும், 5 ஆண்டுகளில் ஏதும் செய்யாமல் இப்போது தேர்தலை முன்வைத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகள் அளித்த நிதிநிலை அறிக்கையில் சொன்னதில் எவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்கள்?என கேள்வி எழுப்பினார். மேலும், ஆண்டுக்கு 2கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள் அதை செய்யவில்லை,மேக் இன் இந்தியா என்ற ஒரு அறிவிப்பை அறிவித்தார்கள். எவ்வளவு தொழில் நிறுவனங்கள் வந்திருக்கிறார்கள்? என்று எந்த விவரங்களும் இல்லை.

"பட்ஜெட்டில் இதுக்கு முன்னர் சொன்னதையே செய்யவில்லை, இப்போது மட்டும் ?" - டி.கே எஸ்.இளங்கோவன் விமர்சனம் !

நிதிநிலை அறிக்கையில் சொல்வதற்கு மாறாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள் இருந்து வந்துள்ளது.உள்கட்டமைப்புக்காக செலவு செய்வோம் என்று கூறி இருக்கிறார்கள். பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்தார்களே தவிர சாதாரண மனிதர்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை,தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க எதுவும் செய்யவில்லை.

உலக பணக்காரர்களில் 691வது இடத்திலிருந்த அதானியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்ததை தவிர, பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை அதனால் வளர்ச்சி ஏற்படவில்லை, பொருளாதாரம் வீழ்ந்து இருக்கிறது என விமர்சித்துள்ளார்.

"பட்ஜெட்டில் இதுக்கு முன்னர் சொன்னதையே செய்யவில்லை, இப்போது மட்டும் ?" - டி.கே எஸ்.இளங்கோவன் விமர்சனம் !

மேலும்,நிர்மலா சீதாராமன் எழுதிக் கொடுத்ததை படிப்பார். இங்கே எய்ம்ஸ் மருத்துவமனை போலத்தான், எல்லாவற்றையும் அறிவித்து விட்டு மட்டும் செல்வார்கள்.எதைச் செய்தாலும் அடுத்த தேர்தலை கணக்கில் வைத்து தான் செய்வார்கள் 2024 தேர்தலை முன்னிறுத்தி திட்டங்களை அறிவித்திருக்கலாம், அது செயல்படுகிறதா? என்பதைத் தான் பார்க்க வேண்டும் 8 நிதிநிலை அறிக்கையில் சொன்ன எதையும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories