அரசியல்

ஆளுநருக்கு எதிரான உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. கேரள ஆளுநருக்கு நெருக்கமானவர்கள் ராஜினாமா !

துணை வேந்தர்கள் மீதான விசாரணை முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஆளுநருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஆளுநருக்கு எதிரான உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. கேரள ஆளுநருக்கு நெருக்கமானவர்கள் ராஜினாமா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.

ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஆளுநருக்கு எதிரான உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. கேரள ஆளுநருக்கு நெருக்கமானவர்கள் ராஜினாமா !

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த பரபரப்பான சூழலில் கேரளா, கண்ணூர், மகாத்மா காந்தி, காலடி சமஸ்கிருதம், அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த உத்தரவுக்கு ஆளும் இடதுசாரி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், துணை வேந்தர்கள் பதவி விலகி தேவையில்லை எனவும் கூறியிருந்தது.

ஆளுநருக்கு எதிரான உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. கேரள ஆளுநருக்கு நெருக்கமானவர்கள் ராஜினாமா !

அதைத் தொடர்ந்து ஆளுநரின் உத்தரவை ஏற்க 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் மறுத்துள்ளனர். மேலும் 11 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியிருந்த விவகாரத்தில் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் விசாரணை முடியும் வரை எடுக்கக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் இந்த விவகார்ட்டத்தில் ஆளுநருக்கு நெருக்கடி முற்றிய நிலையில் ஆளுநரின் சட்ட ஆலோசகரும், கேரளாவில் உள்ள ஒட்டு மொத்த பல்கலைக்கழகங்களின் வேந்தரின் நிலையான ஆலோசகரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பெற்றுக்கொண்ட நிலையில், இதுவரை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

banner

Related Stories

Related Stories