அரசியல்

“ஆளுங்கட்சியாக இருந்தாலும் பின்வாங்க மாட்டோம்..” : இந்தி திணிப்புக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம், போராட்டமாக மாற வேண்டுமா வேண்டாமா என்பது உங்கள் கையில் தான் உள்ளது என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேசியுள்ளார்.

“ஆளுங்கட்சியாக இருந்தாலும் பின்வாங்க மாட்டோம்..” : இந்தி திணிப்புக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு பல இன்னல்கள் கொடுத்து வருகின்றன. மேலும் மாநிலங்களின் உரிமைகள், விவசாய பிரச்னை, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் பல கேடு விளைவிக்கும் செயல்களை முன்னெடுத்து வருகிறது.

அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பரிந்துரையை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது. அதில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என்ற நோக்கமும் இடம்பெற்றுள்ளது.

“ஆளுங்கட்சியாக இருந்தாலும் பின்வாங்க மாட்டோம்..” : இந்தி திணிப்புக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

இதற்கு தற்போது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன. மேலும் மேற்கு வங்கம் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை எடுத்திருக்கும் நிலையில், கேரள முதல்வர் இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தி என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

“ஆளுங்கட்சியாக இருந்தாலும் பின்வாங்க மாட்டோம்..” : இந்தி திணிப்புக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் ஒன்றிய அரசின் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை ஏற்று தி.மு.க. இளைஞர் அணியும்-மாணவர் அணியும் இணைந்து, இன்று காலை 9.00 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது.

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையேற்று, தயாநிதி எம்.பி., உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாநில உரிமைகளை ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார் என்று பேசினார்.

“ஆளுங்கட்சியாக இருந்தாலும் பின்வாங்க மாட்டோம்..” : இந்தி திணிப்புக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

மேலும் பேசிய அவர், "இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டியிருக்கிறது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டியிருக்கிறது. ஒன்றியம் என்று சொன்னால் கோபம் வரும். அதனால் அப்படியே அழைக்கிறேன். ஒன்றிய அரசின் பிரதமர் மோடி அவர்களே... உள்துறை அமைச்சர் அவர்களே...

நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல இங்கு நடந்து கொண்டிருப்பது அ.தி.மு.க-வின் எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, பன்னீர்செல்வத்தின் ஆட்சியோ இல்லை. இப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருப்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

“ஆளுங்கட்சியாக இருந்தாலும் பின்வாங்க மாட்டோம்..” : இந்தி திணிப்புக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது வெறும் ஆர்ப்பாட்டம்தான் நடத்தியிருக்கிறோம். இது போராட்டமாக மாற வேண்டுமா, வேண்டாமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று இந்தித் திணிப்பை எப்போதும் எதிர்ப்போம் என்பதுதான். அதிலிருந்து சற்றும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

எங்களுடைய மாநில உரிமைகளை ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார். ஏனென்றால், நாங்கள் பெரியார், அண்ணா, கருணாநிதியின் வழியில் வந்தவர்கள். இந்தியை எதிர்த்த போராட்டத்தில்தான் முதன்முதலில் ஆட்சியில் அமர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். இப்போது மீண்டும் கழகம் ஆட்சியில் இருக்கிறது" என்றார்.

banner

Related Stories

Related Stories