அரசியல்

கொரோனாவை காரணம் காட்டி லட்சத்தீவில் பயோ வார் - ஒன்றிய அரசை சாடிய நடிகை மீது தேச துரோக வழக்குப்பதிவு!

லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய நடிகை அய்ஷா சுல்தானா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை காரணம் காட்டி லட்சத்தீவில் பயோ வார் - ஒன்றிய அரசை சாடிய நடிகை மீது தேச துரோக வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தையும், கலாச்சாரதையும் சிதைக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக லட்சத்தீவைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குநருமான அய்ஷா சுல்தானா அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அந்த விவாதத்தில் பேசிய சில பகுதிகளைக் குறிப்பிட்டு பா.ஜ.க பிரமுகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் லட்சத்தீவு காவல்துறை நடிகை மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது.

லட்சத்தீவு நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது.

banner

Related Stories

Related Stories