அரசியல்

”90’களின் இறுதியில்” : மீண்டும் தலைத்தூக்கிய கர்ணன் பட சர்ச்சை - உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”90’களின் இறுதியில்” : மீண்டும் தலைத்தூக்கிய கர்ணன் பட சர்ச்சை - உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதிய வன்முறையின் கோர முகத்தைத் திரையில் காட்சிப்படுத்தியுள்ளது ‘கர்ணன்’.

‘கர்ணன்’ திரைப்படத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கொடியன்குளம் வன்முறைச் சம்பவம் 1995ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது நடைபெற்ற நிலையில், அச்சம்பவம் குறித்த காட்சிகளை 1997ன் முற்பகுதி எனக் குறிப்பிட்டு தி.மு.க ஆட்சிக்காலம் என்பதுபோல திரித்துக் காட்டப்பட்டுள்ளது.

சமூக நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் வரலாற்றைத் தவறாக திரிக்கலாமா விமர்சகர்களும், ரசிகர்களும் இயக்குநருக்கும், படக்குழுவிற்கும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், படக்குழு இதுவரை இதுதொடர்பாக விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

இந்நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்தபிறகு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, இந்தச் சர்ச்சை குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், 1995 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். ‘அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திருத்தப்பட்டக் காட்சியில் பொத்தாம் பொதுவாக 90களின் பிற்பகுதி எனக் குறிப்பிட்டிருந்தது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவில், “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.

படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை.அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories