அரசியல்

‘மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்’ : பா.ஜ.க.வுக்கு ‘டாட்டா’ காட்டும் சிவசேனா!- பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க-சிவசேனா கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கு காரணமாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே- மகராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் ( கோப்புப் படம்)
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே- மகராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் ( கோப்புப் படம்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., – சிவசேனா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான இடங்கள் கிடைத்தது.

இருப்பினும் இரு கட்சிகளிடையே 50;50 என்ற அதிகார பகிர்வு குறித்த பிரச்னையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

நன்றி: டெக்கான் ஹெரால்டு
நன்றி: டெக்கான் ஹெரால்டு

இரு தரப்பினரும் ஏற்கனவே நடந்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் முரண்டு காட்டி வருவதாகவும் தெரிகிறது. இதனால் தாக்ரே, முதல்வர் பட்னாவிஸ் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக சிவேசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான சஞ்சய் ரவுத் மற்றும் மூத்த எம்பி.,க்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை , அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளனர்.

இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதித்திருக்கலாம் என அரசியல் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே சரத்பவார் எதிர்கட்சி வரிசையில் அமருவோம் என தெளிவுபட அறிவித்திருந்த நிலையில் தற்போதைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

‘மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்’ : பா.ஜ.க.வுக்கு ‘டாட்டா’ காட்டும் சிவசேனா!- பின்னணி என்ன?

அரசியலில் எதிரும் புதிருமான விளங்கி வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சிவசேனாவும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், சிவசேனா ஏன் பா.ஜ.க.,வை விட்டு விலக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்’ : பா.ஜ.க.வுக்கு ‘டாட்டா’ காட்டும் சிவசேனா!- பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைக்க பா.ஜ.க முயற்சி செய்ததாகவும், அதன்காரணமாகத் தான் சிவசேனா ஆட்சி அமைக்க முந்திக் கொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான முடிவுகளை எட்டும் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிலையை நாடே உற்றுநோக்கி வருகிறது.

banner

Related Stories

Related Stories