அரசியல்

சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்வர் : பா.ஜ.க - சிவசேனா கூட்டணியில் புகைச்சல் !

மஹாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சிவசேனாவைச் சேர்ந்த மண்ணின் மைந்தர் ஒருவர்தான் பதவியேற்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்வர் : பா.ஜ.க - சிவசேனா கூட்டணியில் புகைச்சல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. அம்மாநில முதல்வராக பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவசேனா கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் பாஜக கட்சி 23 இடங்களையும், சிவசேனா கட்சி 18 இடங்களையும் கைப்பற்றியது. பா.ஜ.க கட்சி மீண்டும் மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியை மட்டுமே வழங்கியது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாமனாவில் அக்கட்சியின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு எழுதப்பட்ட தலையங்கத்தில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிவசேனா ஆண்டு விழாவை முன்னிட்டு மராட்டிய மாநில சட்டமன்ற கட்டிடத்திற்கு காவி வண்ண சாயம் பூசுமாறு அரசுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் கட்சியின் 54வது ஆண்டு விழாவின் போது, சிவசேனாவின் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர் தான் மராட்டியத்தின் முதல்வராக இருப்பார் என்றும் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்வர் : பா.ஜ.க - சிவசேனா கூட்டணியில் புகைச்சல் !

சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே,தமது மகன் ஆதித்யா தாக்ரேவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்து வரும் நிலையில், இந்த தலையங்கம் அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது. மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்வர் பதவி சிவசேனாவுக்கு தான் என்ற சாமானாவின் தலையங்கம் பாஜக - சிவசேனா கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories