அரசியல்

”விவிபேட் வாக்குகளை எண்ணும் வரை பொறுப்போம்” - மம்தா பானர்ஜி ட்வீட்

தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையாக அலசிய பின் உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தி.மு.க கூட்டணி 38 மக்களவைத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 14 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது தி.மு.க.

இந்திய அளவில் பா.ஜ.க கூட்டணி 326 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 96 இடைங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ட்விட்டர் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் “ தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். தோற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் இல்லை. தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையாக அலசிய பின் உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். வாக்கு எண்ணும் பணி முழுமையாக நிறைவேறட்டும். விவிபாட் வாக்குகளுடன் மின்னணு வாக்குகள் ஒன்றிப் போக வேண்டும்.” என முழுமையான முடிவுகளுக்காக பொறுத்திருக்குமாறு பதிவிட்டுள்ளார் மம்தா பானர்ஜி.

banner

Related Stories

Related Stories